Sunday, April 12, 2026

உசிலம்பட்டி பூசணிக்காய் பஞ்சாயத்து

உசிலம்பட்டியில் பூசணிக்காய் பஞ்சாயத்து என்பது மிகவும் பிரபலமான மற்றும் நகைச்சுவையான ஒரு நிகழ்வாகும். அம்மாவாசை நாளில் கடையடைக்கும் பொழுதில் , கற்பூரம் ஏற்றி, சாமிகும்பிட்டு கடைவாசலில் பூசணிக்காய் உடைப்பது பெரும்பாலோரின் வழக்கம் ஆகும். தெருவெங்கும் குங்குமம் தினிக்கப்பட்ட பூசணிக்காய்  உடைந்து சிகப்பு நிறத்தில் நிறைந்து கிடக்கும். அதில் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகும் மோட்டர் சைக்கிள் நிகழ்வுகள் சரவ சாதாரனமாகும்.


அப்படி  நகைக்கடைத்தெருவில், ஒரு கடையில் அம்மாவாசையன்று பூசணிக்காய் உடைத்த ஒருவர்மீது 2 கடை  தள்ளியிருக்கும் மற்றொரு கடைக்காரர் பஞ்சாயத்து கொடுத்தார். இவர் உடைத்த பூசணிக்காயின் ஒரு துண்டுபகுதி எனது கடைக்கருகில் விழுந்தது, அவர்கழித்த திருஷ்ட்டியானது அந்த பூசணிக்காய் துண்டுவழியாக எனது கடைக்குள் வந்து எனக்கு வியாபாரத்தில் நட்டம் ஏற்ப்பட்டுவிட்டது,, அதற்கு ஈடாக 1 லட்சம் ரூபாய் தரவேண்டும் என்று பிராது கொடுத்தார். பஞ்சாயத்து தலைவர்களும் சரிப்பா அவன் கேட்பது நியாயம்தான், 1 லட்ச ரூபாய் கொடுத்துவிடு என்று அறிவுறுத்தினார்கள்(தீர்ப்பு இல்லை).


 கடைக்காரரோ அரண்டுபோய் , யோவ் நானே வியாபாரம் சரியில்லை என்று கவலைபட்டுப்போய் பூசனிக்காய் உடைத்தேன், அதற்கு இன்னொரு கஷ்ட்டமா? முடியாது என்று சொல்லிவிட்டார்.

வழக்கு தொடுத்தவரோ, அடிக்கடி கடைக்கு சென்று தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார், சம்பளத்திற்கு ஆள்வைத்து நிதானமின்றி கடைக்குமுன் சலம்பல்கள் செய்ய வைத்தார். அடிக்கடி பஞ்சாயத்து விசாரனைகள் வந்தவன்னம் இருந்தன.


இறுதியில், பஞ்சாயத்து தலைவர்கள், மிகவும் இறங்கி கெஞ்ச ஆரம்பித்துவிட்டனர், சரிப்பா இவன் அடியாள் வைத்தெல்லாம் செலவுசெய்துவிட்டான், ஒரு பத்தாயிரமாவது கொடுத்துவிடு என்றனர். அந்த கடைக்காரரோ என்னடா வம்பா போச்சே, சரி இவனுகளிடம் மல்லுகட்ட முடியாது என்று முடிவிக்கு வந்து ஐந்தாயிரம் ரூபாய் தருகின்றேன் முடித்துவிடுங்கள் என்றார். வழக்கு தொடுத்தவரும் வந்த வரைக்கும் லாபம் என்று 5000 ரூபாய் பெற்று வழக்கை முடித்துக்கொண்டார்.

இதைபற்றி கேட்டால் இன்றும் உசிலையில் அனைவரும் சிரிப்பாக நினைவுகூர்வார்கள்.

அதே நிகழ்வு இப்பொழுது பஞ்சாயத்து கொடுத்தவர் இரேல், பஞ்சாயத்து தலைவர் அமெக்கா, தலையெழுத்தே என்று தண்டம் கட்டியது ஹிரான் நாடு என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

Sunday, January 04, 2026

My Midway moment

 #mymidwaymoment

6 வருடங்களுக்கு முன்னர் நான் பார்த்த திரைப்படம் Midway , இரண்டாம் உலகப்போர் குறித்த எந்த ஒரு திரைப்படத்தையும் விட்டு வைப்பதில்லை.அதிலும் விமானம் தாங்கி கப்பல் குறித்த படமென்றால் மிகவும் விரும்பி பார்ப்பேன். Pearl Harbor, Behind Enemy Lines, Top Gun வரிசையில், Midway திரைப்படம்.


 விமானம் தாங்கி கப்பலின் பிரமாண்டத்தை திரைப்படத்தில் பார்த்தாலே இப்படியிருக்கின்றதே நேரில் பார்த்தால் எப்படியிருக்கும் என்று நினைத்ததுண்டு. சாண்டியாகோ நகரில் CV-41 விமானம் தாங்கி கப்பலானது பொது மக்கள் பார்வைக்கு போர் விமானங்களுடன் இருக்கின்றது என்று கேள்விப்பட்டிருந்தேன். இந்த விடுமுறையில், அங்கு சென்றபொழுது அந்த கப்பல் அருங்காட்சியகத்திற்கு சென்று பார்த்து பிரமிப்பின் உச்சதிற்கே போய்விட்டேன்.


இந்த கப்பலுக்கு Midway என்று பெயர்வந்த காரனமே  சுவாரசியமானது.


விரிவான பதிவை படிக்கும் ஆர்வமும் பொறுமையும் உள்ளவர்கள் தொடருங்கள்.


நான் பார்த்த நாட்டு மக்களிலேயே ஜப்பான் நாட்டு மக்கள்தான், அமைதியான, மிகப்பண்பான, பிறருக்கு உதவும் மனப்பான்மை பெரிதும்கொண்ட, பிறரது அந்தரங்களை மிகவும் மதிக்கக்கூடியவர்கள்.


நமது உடல்மொழியானது பிறரை சங்கடப்படுத்திவிடுமோ என்று பயப்பட்டு கூட, தங்களை வருத்திக்கொள்ளும் ஒரே மக்கள் ஜப்பான் நாட்டுமக்கள் ஆவர்.


இவர்கள் எப்படி இரண்டாம் உலகப்போரில் இப்படி ஆக்ரோஷமாக நாடு பிடிக்கும் ஆசையில், கொலைவெறியுடன், மனிதப்பன்புகளை மதிக்கமல் ஆடித்தீர்த்தனர் என்று ஆச்சரியமாக இருக்கின்றது.  (ஆமாம் நம்ம சோழ மன்னர்கள்கூட நாடுபிடித்தவர்கள்தானே).


இரண்டாம் உலகபோரைபற்றிய நிகழ்வுகள் பேசித்தீராது,


பெரும்பான்மையான ஆசிய நாடுகளை போரிட்டு பிடித்த ஜப்பான், இந்தியாவை பிடிக்க முடியாமல் அடிவாங்கிஓடியது. 2ம் உலகப்போரில் ஈடுபட்ட மிகப்பெரிய குழுவானது இந்திய மக்கள்தான். பிரிட்டீஷ் அரசின் விடுதலை உறுதிமொழியினால்  25 லட்சம் இந்தியர்கள் ஈடுபட்டனர். 1944 ம் ஆண்டு நடந்த Battles of Imphal and Kohima என்ற போர் மனிப்பூர் பகுதியில் நடைபெற்றது. இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால், ஜப்பான் படையினருடன், நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் இந்திய தேசியப்படையும் சேர்ந்து இந்தியாவிற்கு எதிராக போரிட்டது.

 இந்தியாவின் சுதந்திரம்வேண்டி ஜப்பான் நாட்டிடம் பேசி, இங்கிலாந்து அரசை வெளியேற்ற ஒப்பந்தம்போட்டு வந்தார். அவரது படையை, இந்தியர்களை வைத்தே அழித்தொழித்தது இங்கிலாந்து அரசு.


ஜப்பான் படையினர், ஒவ்வொரு நாட்டிலும் லட்சக்கனக்கான மக்களை கொன்றூ குவித்து, பதின்ம மற்றும் இளவயது பெண்களையெல்லாம் கடத்தி வந்து பாலியல் அடிமைகளாக ஜப்பானிய வீரர்களுக்கு அளித்தது. இன்னுமும், சீனா, கொரியா, கம்போடியா, தைவான், இந்தொனேஷியா, சிங்கப்பூர் மற்றும் பல நாட்டு மக்கள் ஜப்பானை உள்ளப்பூர்வமாக வெறுக்கின்றனர். ஆசிய பகுதிகளில் கோர தாண்டவமாடிய ஜப்பான், தனது பாதுகாப்பு எல்லையை விரிவுபடுத்த நினைத்து பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுகளை கைப்பற்ற நினைத்ததுதான் அதற்கு வினையாகிப்போனது,


1945 ல் அமெரிக்கா அனுகுண்டு போடுவதற்கு முன்னமே 1942ல் மிட்வே (Midway) (ஜப்பனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பசிபிக் க்டலில் உள்ளதால் அந்த பெயர்)  எனும் தீவினை கைப்பற்றூம் முயற்சியில் செம்ம அடி வாங்கியது ஜப்பான். 6 மாதத்திற்கு முன்னர் பேர்ல் ஹார்பர் தக்குதலில் வெற்றி பெற்ற மமதையுடன் அடுத்து இருக்கும் மிட்வே தீவினை கைப்பற்ற , ஒரு தந்திர திட்டம் தீட்டினர். அலாஸ்கா பகுதியில் இருக்கும் ஒரு தீவினை தாக்கும்படி சிறிய படையை அனுப்பி, அமெரிக்க ரானுவத்தின் கவனத்தை  திசை திருப்பி, அசந்த நேரத்தில், மிட்வே யை தாக்கி பிடிக்குமம் உத்தி அது.


ஆனால்,அந்த திட்டத்தின் செய்தி பரிமாற்றத்தினை அமெரிக்க ரானுவ உளவுத்துறை இடைமறித்து குத்துமதிப்பாக அறிந்து தனது படைகளை மிட்வேயிலேயே வைத்திருந்து ஜப்பான் படைகள் வந்தவுடன், தாக்கி அழித்தனர்.


அழிவு என்றா சாதாரன அழிவு அல்ல, 4 பெரிய விமானந்தாங்கி கப்பல்கள் உள்பட பெரும் உயிர்ச்சேதம் மற்றும் பொருள் சேதம் ஜப்பானுக்கு ஏற்ப்பட்டது.


அந்த வெற்றியின் நினைவாகத்தான்,  அதன் பிறகு கட்டுமானம் செய்யப்பட்ட  CV-41 விமானம் தாங்கி கப்பலுக்கு USS Midway (CV-41) என்று பெயரிட்டனர். 50 வருட பணிக்கு பிறகு அது பொது மக்கள் பார்வைக்கு காட்சியாக கலிபோர்னியாவின் சாண்டியாகோ நகரில் கம்பீரமாக நிற்க்கின்றது


மிட்வே தாக்குதல் குறித்த தகல்களை படித்து பிறகு 2019 ல் வந்த Midway திரைப்படத்தை பாருங்கள். இறுதி காட்சிகள் மிக நெகிழ்வாக இருக்கும். பரபரப்பான பேர்ல் ஹார்பர் தாக்குதல் காட்சியும் இதில் இருக்கின்றது.























Friday, November 03, 2023

கல்வி தேவையா?.

கல்வி தேவையா?. SIN, COS TAN போன்ற கணக்கீடுகள் னது வாழ்க்கைக்கோ தொழிலுக்கோ உபயோகப்படுத்தப்படாமல் இருக்கும்பொழுது அதை எதற்க்காக படிக்கவேண்டும் போன்ற கேள்விகள் சங்கித்தனமான பரப்புரைகள், பிக்பாஸ் மற்றும் நீயா நானா புண்ணியத்தில் மக்களிடையே விவாதப்பொருட்கள் ஆகி இருக்கின்றன.

மொழி, அறிவியல், கணக்கியல் போன்ற தொழில்முறை அல்லாத பொதுக் கல்வியில் கற்ற வித்தைகள் வாழ்க்கைக்கோ தொழிலுக்கோ யாரும் பயன் படுத்தப்போவதே இல்லை என்றுதான் தவறாக எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.

கூட்டமாக தத்தனித்தனி இனமாக வாழ்ந்து மற்ற இனத்தினை சண்டையிட்டு அழித்து பொருட்களை கொள்ளையிட்டு வாழ்ந்திருந்தத மனித இனம்.

சண்டையிடுவது தவறு, இன்றைக்கு இருக்கும் உணவு எத்தனைபேருக்கு இத்தனைநாள் தேவைப்படும் எவ்வளவு சேமித்துவைக்கவேண்டும். மற்றும் உணவை நாமே எப்படி தயாரிக்கலாம் என்றல்லாம் எண்ணி நாகரீக முன்னேற்றம் அடைந்ததெல்லாம் என்னவென்று நினைக்கிண்றீர்கள்?

சமூகவியல், கணக்கியல், அறிவியல் போன்ற கல்விகளினால்தான் நிகழ்ந்தது இது என்பதுதான் உண்மை..

இதெல்லாம் பொது அறிவுதான் இதை கல்வி என்று சொல்ல முடியாது என்று நினைப்பீர்களேயானால் அது தவறு.

பொது அறிவு கொண்ட ஒருவர் அவைகளை மற்றவருக்கு அறிவுறுத்தி கடத்தினால் மட்டுமே இது செயலாக்கம் ஆகும். அந்த அறிவுறுத்தல் என்பதுதான் கல்வி ஆகும்.

கல்வியானது தேடும் ஆர்வத்தை உண்டாக்கி, சிந்திக்கும் சக்தியை அதிகரித்து , குழப்ப சிக்கலுக்கு தீர்வு காணவும் , புதிய உத்திகளை உருவாக்கவும் கற்றுத்தருகின்றது. எந்த ஒரு தொழிலுக்கும் இவைகள் மூன்றும் தேவைதான்.

கல்வி என்பது மிக முக்கியமானது ஆகும். விவசாயம் செய்பவர்களும் வியாபாரம் செய்பவர்களும், கண்டவர்கள் பேச்சை கேட்டு கல்வியை கைவிடல் ஆகாது.

கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே

பள்ளிப் படிப்பு அல்லது கல்லூரி படிப்புக்குப் பிறகுதான் நமக்குள் என்ன ஆர்வம் இருக்கின்றது என்று தெரியும். அதன் பிறகு அதற்க்கு தகுந்த தொழில் கல்வியை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

அப்படி சிரமப்பட்டு படிக்கவேண்டுமா என்றால் இல்லைதான். முடிந்த அளவிற்கு சற்று முயற்சி செய்யத்தான்வேண்டும்.

என்னதான் செய்தாலும் நமக்குள் இருக்கும் ஆர்வத்தை அறிந்துகொள்ளலாமே தவிர நமக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மையான திறமையை அந்த கடவுள் தவிர யாராலும் அறியமுடியாது.எனக்குத்தெரிந்து இந்த உலகில் தான் கொண்ட திறமைக்கேற்ற தொழிலை பெற்றவர்கள் இரண்டே பேர்தான்,

1). இளையராஜா
2). பீட்டர் ஜாக்சன் (திரைப்பட இயக்குனர்)

இரண்டு கேள்விகள் உங்களுக்கு

1).அணில் அம்பானி மகனுக்கு கல்வி தேவையா?
2). SIN, COS கணக்கீடுகளை வாழ்க்க்கையில் போட்டுப்பார்காத மனிதனே இவ்வுலகில் இருக்கமுடியாது. வாழ்க்கை தேவைக்கு நீங்களும் போட்டுத்தான் இருக்கிறீர்கள் எப்படியென்று தெரியுமா?



Sunday, July 09, 2023

தமிழ் மன்றம் இளசு அண்ணா

 உயிர் வாழ்தல் எனும் நோக்கத்தை அடுத்து தேடுதல் என்பது மனிதனின் முக்கியமாக இருக்கின்றது. எத்தனையோ தேடல்கள், 


எந்த ஒரு கதையையும் (நாவல், சிறுகதை, திரைப்படம்) பார்த்தால் அதன்  மூல முக்கிய கருவானது தேடலாகத்தான் இருக்கும். மனிதனின் இந்த தேடலை அருமையானதொரு வியாபார உத்தியாக்கி வெற்றிகொண்டது கூகிள். 

பலவகை தேடலில் சுவாரசியமானது, நேரில் பார்க்காத ஒருவரை அவரைப்பற்றிய கேள்விகளினால் தேடுவதாகும், 

சொல்லத் துடிக்குது மனசு திரைப்படத்தில் தேன்மொழி என்பவரை பற்றி அனைவரும் சிலாகித்து பேசுவதை  கேட்கையில் அவரை சந்திக்கத்துடித்து தேடியலைந்து தன வாழ்க்கையை தொலைத்து பின்னர் எப்படி வாழ்க்கையை சரி செய்கின்றார் அந்த கதாநாயகன் என்ற கதை.

மாறா திரைப்படத்தில் கதாநாயகன் சுவற்றில் வரைந்த ஓவியங்களை கண்டு பிரமித்து, வரைந்தவரின் உள்ளக்கிடக்கை எப்படிப்பட்டதாக இருந்தால் இப்படி ஒரு ஓவியமாக வரும் என்று அவரை சந்திக்க தேடியலைந்து கண்டுபிடித்து சேரும் அந்த கதாயாயாகியின் கதை.

Wicker Park திரைப்படத்தில் திருமணமான விளம்பர நிர்வாகி ஒருவர் தற்செயலாக பார்க்கும் ஒருபெண் தனது பழைய காதலி இருப்பதால் அவரை வெறித்தனமாக தேடியலைந்து சந்திக்கும் கதை .

வெற்றிவிழா திரைப்படத்தில் சுயத்தை தொலைத்து தன்னையே தேடியலைந்து அறியும் கதாநாயகனின் கதை.

(இன்னும் பல)

இவைகள் போலவே எனக்கும் ஒரு அனுபவம் ஏற்பட்டது.

ஆமாம் நானும் இளசு அண்ணா என்பவரை தேடியலைந்து இன்றுவரை சந்திக்காமலும் இருக்கின்றேன். நான் மட்டுமல்ல என்னைப்போல நூற்றுக்கணக்கணவர்கள் தேடியலைந்து கொண்டுதானிருக்கின்றனர்.

2000ம் ஆண்டு வாக்கில் , முகநூல் மற்றும் சமூக ஊடகங்கள் அதிகம் இல்லாத நாட்களில் http://tamilmantram.com/ தளம்தான் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. துபாய் , அமெரிக்கா , ஜப்பான் , ஆஸ்திரேலியா , இங்கிலாந்து , டென்மார்க் (இன்னும் பல )  நாடுகளுக்கு வேலை நிமித்தமாக சென்றிருந்த தமிழர்களை இணைத்த அந்த தமிழ் மன்றத்தில் குழு தலைவராக இருந்தவர்தான் இளசு அண்ணா . நேரில் சந்திக்காத, முகமறியாத ஒருவர் எப்படி நூற்றுக்கணக்கணவரின் அன்புக்குரிய அண்ணனாக ஆகா முடியும்?

முடியும்தான். நான் கீழே கொடுத்துள்ள இணைப்பினை பாருங்கள் அவரை காணாமல் துடித்து போன தம்பி தங்கைகளின் பதிவுகள்.

நான் குடும்பத்தை பிரிந்து 2004ம் வருடம் ஜப்பான் நாட்டிற்க்கு சென்றபொழுது பிரிவுத்துயர் மற்றும் குடும்ப நோயினால் பாதிக்கப்பட்டு மனம் குழம்பிஇருக்கையில்தான் இளசு அண்ணா அவர்களின் ஆறுதல் வார்த்தைகள் தமிழ் மன்றத்தில் கிடைத்தது. அவரும் புலத்தினை  பிரிந்தது இங்கிலாந்தில் பணியாற்றுவதாக சொன்னார். ஆனால் உண்மை பெயர் மற்றும் தொடர்பு விவரத்தை தரவேயில்லை. உடன் பிறந்த அன்னான் போல என்பால் அக்கரை கொண்டிருந்தார்.

அவர் என்னை மிகவும் பாதித்தது ஒரு உரையாடலில்தான்.

மரணத்திற்கு பின்னால் வாழ்க்கை உண்டா என்ற தலைப்பிலான விவாதத்தில் நான் ஒரு பதிலிட்டிருந்தேன்.

அதைக்கண்டு வியந்த இளசு அண்ணா அவர்கள் ஒரு அறிவியல் கோட்பாட்டினை சொல்லி , இப்படிப்பட்ட ஒரு சிக்கலான அறிவியல் கோட்பாட்டினை இப்படி எளிதாக விளக்கிவிட்டீர்களே இந்த புதிரை  விடுவித்த அந்த உலகப்புகழ் பெற்ற அறிவியல் வித்தகர்கூட குழப்பமான விளக்கம்தான் தந்திருந்தார் என்று வாழ்த்தி பதிவிட்டிருந்தார்.

நான் திடுக்கிட்டு போய்விட்டேன். அந்த அறிவியல் கோட்பாட்டினை படித்து பார்த்து வியந்தேன், அப்படியே நான் நினைத்தது போலவே இருந்தது. அப்பொழுதுதான் எனக்குள் இயற்பியல் அறிவு தொடர்பான சிந்தனைகளும் இருக்கின்றது என்று உணர்ந்தேன். அது குறித்த ஆராய்ச்சியில் இன்னும் இருக்கின்றேன். 

அது குறித்து பின்னர் விளக்குகின்றேன். 

இங்கே பாருங்கள் இளசு அண்ணா குறித்து மற்றவர்களின் தேடல் மற்றும் கோரிக்கைகள் . 

http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5344.html

இதில் பாருங்கள், அவர் திரும்ப வருவதாக அறிவித்த பின் மற்றவர்களின் பதில்களை 

http://tamilmantram.com/vb/archive/index.php/t-5690.html

Sunday, June 25, 2023


 திரைப்படங்கள் என்பன ஒரு கருத்தியலை போதிக்கும் ஊடகம்தான் , வரலாற்றை திரித்து கூறும் மற்றும்  தவறாக வழிநடத்தும் உள்நோக்கத்தோடோ  இருந்தால் கண்டிப்பாக அது எதிர்க்கப்பட வேண்டியதுதான்.

இவைநீங்களாக படைப்பாளிகளின் படைப்பாற்றல்கள் ஒன்றுகூடி சங்கமித்து அருவியாக கொட்டும்பொழுது அதை கிடைக்கும் அனுபவம் மனிதனுக்கு வேறு எதிலும் கிடைக்காது.


தேவர் மகன் படத்தில் அப்படி திரித்துக்கூறப்பட்ட மற்றும் தவறாக வழிநடத்தக்கூடிய காட்சிகள் இல்லை. சாதிப்பெருமை பேசும் திரைப்படம் என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. ஆமாம், குறிப்பிட்ட சாதி பற்றிய படம்தான் அது. சமூகத்தில் ஒரு குழுக்களைப்பற்றி எடுக்கப்பட்ட எத்தனை திரைப்படங்களை கண்டு கழித்து ரசித்திருந்திருக்கின்றோம்?

"the last samurai " திரைப்படத்தில் ஜப்பான் நாட்டில் இருந்த சாமுராய் கள் வீர தீரங்கள் குறித்து சிலிரித்துப்போய் பார்த்திருந்தோம்?

"inglorias basterds" திரைப்படத்தில் யூத குழு வீரர்களின் திறமைகளை பார்த்து பாராட்டியிருக்கின்றோம்.

இப்படி பல படங்கள் உள்ளன.

இன்றும் அமெரிக்க அருங்கட்சியகங்களில் குழுக்களாக வாழ்ந்த மக்களின் வாழ்க்க்கைமுறை , உள்  சண்டைகள் மற்றும் உள்நாட்டு சண்டைகள் குறித்து அறிந்து வியக்கின்றோம்?,

அதை சுவைபட ஒரு இட்டுக்கட்டி கதைமூலம் சொல்லுவது என்பது சாதாரணமானது அல்ல. அதை திறம்பட மற்றும் செவ்வனே செய்து மக்களின் மனதில் சேர்ப்பதில் மாபெரும் வெற்றியாளனாகத்தான் கமல் ஹாசன் அவர்கள் இருக்கின்றார்.

இன்னொருபடமான விருமாண்டி .

சண்டியர் என்ற பெயரை கிருஷ்ணசாமி விரும்பாததால் பெயர் மாற்றப்பட்ட படம். தென் மாவட்டங்களில் ஒரு  மக்கள் பாத்திரம் கொண்டுள்ள பெயர். மற்ற மாவட்டங்களில், மைனர், தல , என்று பல பெயர்களில் உள்ளது.

இந்த சண்டியர் கதாபாத்திரமானது மற்ற மாவட்டங்களில் எப்படியோ தென் மாவட்ட கிராமங்களில் ரெம்ப வேறு மாதிரியானது.


எதிலும் அடங்காமல் சண்டித்தனம் பண்ணுவதை  யாருமே கண்டுகொள்ளமாட்டார்கள் என்பதுதான் சிறப்பு.


எங்க ஊர் உசிலம்பட்டி ஆனதுதான்,  சுற்றியுள்ள 48 கிராமங்களுக்கும் டவுன். அங்கிருந்து வரக்கடைசியில் பொழுது களித்து கழிக்க உசிலம்பட்டி  வரும் கிராம சண்டியர்கள் தங்களது அடிப்பொடிகள்  நண்பர்களுடன் வருவார். தங்கள் ஊரு நினைப்பிலேயே சண்டித்தனம் செய்து, ஓட்டல்கள், திரையரங்கில், கடைகளில் , மது கக்கடைகளில் ஓரண்டியிழுத்து அடிவாங்குவார்கள், இறுதியில் , நான் யார் தெரியுமா என்று சொல்லி தாட்டியம் காண்பிக்கையில், ஓ , பள்ளப்பட்டி சண்டியனா , சரிப்பா விடுப்பா , சரி போங்கப்பா எல்லோரும் என்று சொல்லி களைந்து போவர். இது ஒரு சாம்பிள்தான்.இதோபோக, நகரம், கிராமம், குக்கிராமம் போற இடங்களுக்கு தகுந்தவாறு சண்டியத்தனம் இருக்கும்.


விருமாண்டி, கிழக்கு சீமையிலே பாண்டியன், எங்க சின்னராசா படத்தில், பாக்யராஜுக்கு மாமா பையன், போன்ற மற்றும் பலதரப்பட்டிய சண்டியர்கள் மதுரை & தேனி மாவட்டங்களில்  உள்ளனர், 


இதில் என்ன திரைப்பட பெயர் பிரச்சினை என்கிறீர்களா?


இந்த சண்டியர்கள் எல்லாம் குறிப்பிட்ட அந்த சாதியை சேர்ந்தவர்கள் தான் இருக்கமுடியும். மாரிசெல்வராஜ் , கிருஷ்ணசாமி (இவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும்தான்) எல்லோருக்கும் இந்தப்பெயர் ஆனது அந்த சாதியின் வீரத்தை தூக்கி மற்றவர்களின் துன்ப குமுறல்களை இயலாமையாக காட்டுகின்றதே என்ற கோபம்தான்.


ஆனாலும், கமல் ஹாசன் அவர்களின் இத்திரைப்படங்கள் எல்லாம் பல்சுவைகொண்ட தரமான ஆவணங்கள்தான். மாறாக எந்தவிதமான கெட்ட விளைவுகளையும் ஏற்படுத்தாது என்பதுதான் எனது எண்ணம்.


மாரி செல்வராஜ் அவர்களே அதற்கு சரியான உதாரணம். கமல் ஹாசன் அவர்களின் படைப்பு எவ்வளவு யதார்த்தமாக இருந்திருந்தால், மாரிசெல்வராஜ் அவர்கள் அதை உள்வாங்கி தன்னை மேம்படுத்தி, பெரிய தேவர் இருக்கும் இடத்தில் எனது தந்தையை கொண்டுவரவேண்டுமென்று வடிவேலுவை அங்கு நிறு த்தியிருப்பார்.

கமல்ஹாசன் அவர்களுக்கு சபாஷ். அவருக்குத்தான் உண்மையில் வெற்றி.


Friday, October 14, 2022

"out of box thinking" எனும் சொற்றொடர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆக்கப்பூர்வமாக , புதுமையான வழியில் , நூதனமான வழியில் மற்றும் ஒரு விதிகளுக்குட்படாமல் சுதந்திரமாக சிந்தித்து தீர்வு கானல் அதுதான் "out of box thinking" என்று புரிந்திருப்பீர்கள் மற்றும் அறிந்திருப்பீர்கள். ஆனால் அதன் உண்மையான அர்த்தம் அதுவல்ல. தமிழில் "நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும்" மற்றும் "குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுதல்" என்ற சொலவடைகள் உள்ளன. இவைகள்தான் "out of box thinking" இன் அடிப்படை . ஆமாம், நிழலிலேயே இருந்ததால் அதன் அருமை தெரியாது. வெளியே வெயிலுக்கு வந்தால்தான் நிழல் எப்படிப்பட்டது என்று புரியும். இந்த உலகத்தைப்பற்றி அனுபவித்து , மகிழ்ந்து, ஆச்சரியப்பட்டு , புகழ்ந்து எத்தனையோ கவிஞர்கள் எழுதிய கவிதைகளை படித்திருப்பீர்கள். அவற்றில் பாரதியார் கவிதை முற்றிலும் மாறுபட்டு "out of box thinking" வழியில் இருக்கும் . ஆமாம், நான் இந்த பூமி இப்படிப்பட்டது , நான் இப்படியிருக்கின்றேன் என்று பூமிப்பந்ததுக்குள் இருந்துகொண்டே சிலாகித்து எழுதும் கவிஞர்களிடையே , பூமிக்கு வெளியே வந்து பூமியை ஒரு மேசைமீது இருக்கும் பொருளாக ஆக்கி அதை உருட்டி புரட்டி பார்த்து அதிசயப்பட்டு பாரதியார் எழுதிய கவிதைதான் "நிற்பதுவே நடப்பதுவே" . இளையராஜா அவர்கள் அதறகு அருமையாக இசை அமைத்து அப்பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பார். (https://www.youtube.com/watch?v=84KN3uvBnFE) ஆகவே ஆக்கத்தின் விளைவானது நாம் எந்த சூழல், மற்றும் எந்த முன்நோக்கில் இருக்கின்றது என்பதைப்பொறுத்துதான் அமையும். சொல்ல வந்த விசயத்திற்கு , தேவைக்கு அதிகமாகவே பில்டப் கொடுத்துவிட்டேன் என்று நினைக்கின்றேன். இந்து மதத்திற்குள்ளே இருந்த வரையில் ஒரு வெறியனாக இல்லாவிட்டாலும், அதீத பற்று கொண்டிருந்த நான், வெளிவட்டத்திரு வந்த அப்புறம்தான் அதுப்பறிய உண்மைகள் புலப்பட்டன. ஹாலிவுட் திரைப்படங்களில், கிரேக்க, எகிப்து , சீன, ரோமானிய , ஏன் ஜப்பானிய புராணங்கள் கூட ஆர்வமாக எடுக்கப்படும் சூழலில் , இந்திய புராணக்கதைகள் என், அந்த அளவிற்க்கு ஆர்வம் காட்டப்படவில்லை? ராமாயண கதைகள் இந்தியாவைத்தாண்டி கிழக்காசிய நாடுகளிலும் தனித்தனி கதைகளாக பிரபலப்பட்டிருந்தாலும், உலக திரைப்படத்தினை ஈர்க்கவே இல்லை . என்? "out of box thinking" வந்தப்புறம் தெரிகின்றது, இவர்கள் இதைச்செய்யணும் இவர்கள் இதைச்செய்யக்கூடாது என்று இலக்கணம் வகுத்து நம்மை ஆதிக்கம் செய்ததுபோல பிரபஞ்சத்தின் முதல் ஆகாய விமானம் இந்து புராணத்தில் உள்ளது, முதல் பிளாஸ்டிக் சர்ஜரி யானது விநாயகர் தலை மாற்றம் ஆகும் இது குறித்து இந்து புராணத்தில் உள்ளது. கம்பியூட்டருக்கு உகந்த மொழி சமஸ்கிருதம் . உலகின் முதல் கற்பாலம் காட்டியது அனுமன் சேனைகள். திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு நேரே வருகையில் நாசா சொர்க்கை கோள்கள் செயலற்று நின்றுவிடும். உலகத்தின் புவியீர்ப்பு விசையின் மைய்யமானது சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜ பாதத்தின் கீழே உள்ளது . என்று பலவாறாக புருடா விடுவது இந்து மதத்தைப்பற்றி வெளிநாடுகளில் நகைப்பினைத்தான் உண்டாக்கியிருக்கின்றது. அதுமட்டுமல்லாமல், வர்ணாசிரம கருத்தியல்கள் இப்பொழுது உலக பல்கலைக்கழகங்களில் விவாதப்பொருளாக ஆகியிருக்கின்றது. மற்ற மதங்களில் அதிசயங்கள் நிகழ்த்தப்படுவது குறித்து நிறைய கதைகள் இருந்தாலும், இந்துமதம் மற்றும் சமஸ்கிருதம் இவைகள் நவீன காலத்துக்கு அறிவியலுக்கே சவால் விடுவது ஒரு வெறுப்பினைத்தான் விதைத்திருக்கின்றது. நான்தான் முன்னோடிஎன்று சொல்லும் தோரணையே நான்தான் மேம்பட்டவன் என்று சொல்லுதலாகும் கிரேக்க புராணங்களில் வரும் கதைகளை உள்ளடக்கினால் மகாபாரதக்கதைகளில் 45% தான் வரும், மகாபாரதம் போல ஆயிரக்கணக்கான புராணங்கள் இந்தியாவில் உள்ளன, ஆனால் கிரேக்க புராணங்கள்தான் உலகில் அதிகம் விரும்பப்படும் புராணமாகும். ஆதிக்கம் மற்றும் மேட்டிமையை விட்டொழித்தால்தான் இந்துமதம் அதன் பெருமையை தொடர்ந்து கொண்டு செல்ல முடியும்.


Monday, October 10, 2022

 சுவைக்காக சமைத்து சாப்பிட ஆரம்பித்தான் மனிதன் அதன் காரணமாக , செரிமான சக்தி குறைந்துபோபோனது. சிட்டுக்குருவி  அலட்சியமாக சாப்பிடும் பச்சரிசியை மனிதன் சாப்பிட்டால் வயிறு இடம் மாறிவிடும்.


பூமியில் வெயில் அதிகமாக விழும் பூமத்திய ரேகை பகுதியில் வாழும் மக்களின் உடம்பில் சூரியஒளியின் வீரியம் அதிகமாக தாக்குவதால் அவர்கள் தோல் கடினமாகி Melaninஅதிகம் சேர்க்கப்பட்டு தோல் கருப்பாக ஆகிறது. அதுபோல மற்ற வெயில் குறைந்த  இடங்களில் வாழும் மக்களுக்கு வெயில் வேண்டி, தோல் மிருதுவாக்கப்பட்டு, மெலனின் இல்லாமல் வெளிர் நிறத்தில் தோல் ஆகின்றது.

அமேரிக்கா & ஐரோப்பா நாடுகளுக்கு இடம் பெயரும் இந்தியர்களுக்கு பெரும்பாலும் வைட்டமின்-D குறைபாடு வருவதற்க்கு இதுதான் காரணம். 

ஜுராசிக் பார்க் திரைப்படங்களில் வரும் மேற்கோள் "Life will find a way.” 

மனிதன் என்னதான் தனது பழக்க வழக்கங்கள்கை மாற்றிக்கொண்டாலும் மனிதவாழ்க்கையானது தனது பயணத்திற்கான பாதையை கண்டுபிடித்து செல்லும்.

பெண்ணானவள் ஆண்  சார்பு தேவையில்லை என்ற நிலை கொள்வதாலோ அல்லது ஆண் - பெண் பாலின சமதத்துவ சித்தாந்தத்தாலோ,  அல்லது என்ன பழக்க மாறுதல் காரணத்தினாலோ மனித பாலின இயக்கங்களில் ஒரு மாறுதல்  வர ஆரம்பித்து இருக்கின்றது.

பெண்தன்மையுடன் பிறக்கும் ஆண் மற்றும் ஆன் தன்மையுடன் பிறக்கும் பெண் , குழந்தையின்மை,  கருத்தரிப்பு   மருத்துவமனைகளின் வளர்ச்சி இவைகளெல்லாம் மிக சாதாரணமாக இருக்கின்றது.

வெளிப்படையாக தெரியும், தோல் குறைபாடு , பருக்கள், உடல் குறை  இவைகள் வந்தாலே மனது என்ன பாடுபடும். எத்தனை பேர் மனமுடைந்து தவறான முடிவுகளை எடுக்கின்றார்கள்.

அப்படியிருக்கையில் பாலின குறைபாடு என்பது எப்படிப்பட்ட மாணவலியை கொடுக்கும்? பெற்றோர்கள், உடன் பிறந்தோர், நண்பர் அனைவரும் எப்படி ஒரு அன்பான ஆதரவினை கொடுக்கவேண்டும் அவர்களுக்கு? ஆனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி வாழ்வதுதான் அவர்கள் விதியாக இருக்கின்றது.

ஆனால் இப்பொழுது ஒரு விழிப்புணர்வு வந்து இருக்கின்றது. இவர்களும் சமூகத்தில் சமமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றார்கள்.  உள்ளக்கிடக்கினை அப்படியே பகிர உதவும் ஊடகத்தின் அசுர வளர்ச்சிதான் இத்தற்கெல்லாம் முக்கிய காரணம்.

அந்தக்காலத்தில் ஒரு சிலர் சொல்லுவது மட்டுமே மக்களிடையே பரவும், மக்களின் கருத்துக்கள் அதுதான் என்று கற்ப்பிக்கப்படும். ஆனால் இந்தக்காலம் ஊடகத்தின் காலம். மக்களின் உணர்வுகள் எளிதாக உலகம் முழுதும் பரவும்.

"பிக் பாஸ்" போட்டியாளராக ஒரு Transgender நுழையில் அவரை பேசிய பேச்சு சூப்பர். அவருக்கு மேடையும் , களமும் கொடுத்த விஜய் டிவி சூப்பர்.

நான் ஏற்க்கனவே சொன்னது போல நீண்டகால மாற்றத்தில், ஆண்கள் பிள்ளை பெற்றுக்கொள்ளும் படி இயற்கை மாறும்.ஏனென்றால் "Life Will find Way "