10ம் வகுப்பு தேர்வு முடிவு குறித்து ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனங்கள்.
முக்கியமான விமர்சனமானது, "சமச்சீர் கல்வியினால் பாடங்களும்ம் வினாக்களும் இலகுவாக்கப்பட்டன அத்னால்தால் இத்துனை பேர் அதிக மதிப்பென் எடுத்து முன்னனியில் இருக்கின்றனர்" என்பதாகும்.
படித்து முடித்தவுடனே வேலை என்ற ஒரே நன்மை கொன்டதான் கல்வித் தகுதி ஆகும். வேலைக்கு சேர்ந்தபிறகு எல்லா இழவும் ஒன்றுதான். மிக-உயர்ந்த என்று சொல்லிக்கொள்கின்ற கல்லூரியில் படித்தவர்கள் அந்த கல்லூரியில் பெற்றதாகச் சொல்லிக்கொள்கின்ற அதிகப்படியான அறிவினால் ஒன்றையும் கழட்டமுடியாது.
அவர் எப்படி வேலையை கற்றுக்கொள்கின்றார், எந்த அளவுக்கு மனமுவந்து ஈடுபடுகின்றார், எந்த அளவுக்கு மேலதிகாரியின் பொறுப்பினை தான் ஏற்றுக் குறைக்கின்றார், பொன்றவற்றைபொறுத்தே அவரது வளர்ச்சி இருக்கின்றது.
உயர்ந்த கலூரியில் படித்தவர்கள் என்று சொல்லிக்கொள்கின்றவர்களை விட மற்றவர்கள்தான் இந்த விஷயத்தில்,கெட்டிக்காரர்களாக இருக்கின்றனர் என்பது உலகறிந்த விஷயம்.
அறிவாளிகள் மற்றும் உயர்ந்த மதிப்பெண் பெற்ற்வர்கள் மட்டுமே சேரமுடியும் என்ற நிலை கொன்டிருந்த இன்போசிஸ் கதை தெரிந்ததுதானே!.
அதன் தலைமை அதிகாரியே பட்டவர்த்தனமாக "ஒழுங்காக வேலை பார்க்காவிட்டாஅல் தூக்கிவிடுவோம்
" ர்ன்று அறிக்கை விட்டிருந்தார். இப்பொழுது யாராவது சேரமாட்டார்களா என்று தேடிக்கொன்டிருக்கின்றார்கள்.
சமச்சீர் கல்வி என்பது ஒன்னுக்குமே லாயக்கில்லாதவன் என்று உளத்தாக்குதல் செய்யப்பட்டு முடங்க்கிடப்பவனை தட்டி எழுப்பி சீராக்கும் அருமருந்து ஆகும்.
பிறப்பிலே அதிகப்படியான அறிவு கொன்டுள்ளதாகச் சொல்லிக்கொள்கின்றவர்களுக்கு இதனால் என்ன பிரச்சினை வரும் என்று தெரியவில்ல.
மேலும் இதனால் நாட்டின் மொத்த உற்ப்பத்தி கூடும்தான் ஒழிய பழுது ஏதும் இல்லை.