Wednesday, August 13, 2008

வைரஸுடனான முதல் அனுபவம் (பாகம் 5)

(இதைப்படித்து விட்டு இங்கு வரவும் ( விஜய் கம்ப்யூட்டர்ஸ் உசிலம்பட்டி )

அன்று மாலை மீன்டும் முயற்சி செய்தேன், அப்பொழுதும் தயாரிக்கப்பட்ட இயங்குநிரல்கள் இயங்கவே இல்லை, மூல நிரலில் தவறா இல்லை பிளப்பி பழுதானதால் சரியான முறையில் இயங்கு நிரல் தயாரிக்கப்பட்வில்லையா என்று குழம்பி மன்டையை பிய்த்துக்கொன்டேன்.

அப்பொழுது என்னிடம் ஒரே ஒரு கணணிதான் இருந்தது அதிலும் ஹர்ட்‍‍‍டிஸ்க் கிடையாது இரண்டு 360‍K டிரைவ்கள் மட்டும்தான். நிரல்களை தயார் செய்ய டர்போ பேசிக் மற்றும் டர்போ பாஸ்கல் உபயோகித்துக்கொன்டிருந்தேன்.முந்தய தினத்தில் வேறொரு பள்ளிக்காக தயாரித்து வைத்திருந்த நிரல்களை இயக்கிப்பார்த்தேன், முதல் நாள் நன்றாக இயங்கிக்கொன்டிருந்த நிரல்கள் இன்று இயங்கவில்லை. உடனே எனக்கு சந்தேகம் வந்துவிட்டது ஏதேனும் வைரஸ் வேலையாக இருக்குமோன்னு. உடனே நாஷ்ஹாட், மெகாஃபி போன்ற வைரஸ் நீக்கிகளை இயக்கிப்பார்த்தேன் அதுவும் வைரஸ் இல்லை என்று சொல்லியது. என்னட இது மதுரைக்குவந்த சோதனைன்னு நொந்து போயிட்டேன். மறுநாள் அந்த பள்ளிக்கு சென்று செய்முறைவிளக்கம் கான்பிக்கும் பட்சத்தில் நாலாயிரத்து ஐநூறு ரூபாய்கள் கிடைக்கும். நாளை விட்டுவிட்டால் அந்த பள்ளியின் தாளாளரிடம் மீன்டும் அனுமதி வாங்குவது குதிரைக்கொம்புதான். ஆனால் இருக்கும் சூழ்நிலையில் முடியாது போல தோன்றியது.

சரி புதிதாக ஒரு பிளாப்பியை பார்மட் செய்து அதில் இயங்கு நிரல்களை தயார் செய்யலாம் என்று நினைத்து டாஸ் பிளாப்பியைப்போட்டு பார்மட் கட்டளை கொடுத்தேன், கணணி இயங்காமல் நின்றுவிட்டது. பூட்டிங் டிஸ்க் வைத்து மறுபடியும் கணணியை ஆரம்பித்தேன் பிறகு எனது மாணவர்களில் ஒருவரை அழைத்து அங்கிருக்கும் பிளாப்பிகள் அனைத்தையும் வைரஸ் சோதனை செய்யுமாறு கேட்டேன். மெகாஃபி வைரஸ் நீக்கியானது அனைத்து பிளாப்பிகளும் "நியூபக்" (newbug) என்னும் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லியது. எனக்கு மீன்டும் குழப்பமாகி விட்டது என்னடா இப்பதான் வைரஸ் சோதனை செய்தோம் இல்லைன்னு சொல்லுச்சு கொஞ்சநேரம் கழித்து வைரஸ் இருக்குன்னு சொல்லுதேன்னு யோசித்தேன்.

உடனே எனக்குள் பொறிதட்டியது. ஆகா இந்த வைரஸ் ஆனது கணணியில் இயங்கிக்கொன்டிருக்கும்போது கன்டுபிடிக்க முடியவில்லை அது கன்டுபிடிப்பதிலிருந்து தப்பித்து விடுகிறது அதாவது வைரஸ் நீக்கியை ஏமாற்றிவிடுகிறது. எனவேதான் நான் வைரஸ் பாதிக்காத பிளாப்பியின் மூலம் கணணியை ஆரம்பித்த பிறகு வைரஸ் இயங்காத காரணத்தால் அந்தவைரஸ் நீக்கியால் கன்டுபிடிக்க முடிகிறது. உடனே சோதனை செய்தேன், உபயோகத்தில் இருக்கும் பூட்டிங் ‍பிளாப்பி மூலம் கணணியை ஆரம்பித்து மெகாஃபி மூலம் வைரஸ் சோதனை செய்தேன் வைரஸே இல்லைன்னு அடித்துச்சொல்லியது. பிறகு பத்திரப்படுத்தப்பட்ட (வைரஸ் இல்லாத) டிஸ்கின்மூலம் கணணியை ஆரம்பித்து மீன்டும் வைரஸ் சோதனை செய்தால் வைரஸ் வைரஸ் என்று கத்தியது. (வைரஸ் இல்லாத) டிஸ்கின்மூலம் கணணியை ஆரம்பித்து, பள்ளிக்கக தயார் செய்து வைத்திருந்த நிரல்களை இயக்கிப்பார்த்தேன். வெற்றிகரமாக இயங்கியது அப்பாடான்னு பெருமூச்சுவிட்டேன்.

சரி ஒரு பிரச்சினை விட்டது நாளைக்கு செய்முறை விளக்கம் காட்டிவிடலாம். ஆனால் மெகாஃபி வைரஸ் நீக்கி இந்த வைரஸை நீக்கவில்லை, இருக்குன்னு மட்டும் சொல்லுது. இந்த வைரஸை எப்படி நீக்குவது

எப்படி வைரஸானது இயக்கத்தில் இருக்கும்பொழுது வைரஸ்நீக்கியால் அதை கன்டுபிடிக்க முடியவில்லை? மிகுந்த ஆர்வத்தில் அதை உடனே ஆராய்வது என்று முடிவு செய்தேன். மெகாஃபி வைரஸ்நீக்கி அதை பூட் செக்டார் வைரஸ் என்றுதான் சொன்னது

முதலில் அது ஃபைல் வைரஸில்லை என்று உறுதி செய்ய நினைத்தேன். முன்பு ஒருமுறை கணணியில் "Dark aventure" என்ற வைரஸ் வந்தபொழுது பாதிக்கப்பட்ட ஃபைல்களின் அளவு பெரிதாக்கப்பட்டிருந்தது. முதலில் வைரஸால் பாதிக்கப்பட்ட பிளாப்பிமூலம் கணணியை ஆரம்பித்து வைரஸை இயக்கத்தில் இருக்குமாறு செய்துவிட்டு. வைரஸ் பாதித்த பிளாப்பியில் உள்ள இயங்கு நிரல்ஃபைல்களின் அளவுகளை குறித்துக்கொன்டேன். பிறகு வைரஸ் இல்லாத பிளப்பி மூலம் கணணியை ஆரம்பித்துவிட்டு மீன்டும் வைரஸ் பாதித்த பிளாப்பியில் உள்ள இயங்கு நிரல்ஃபைல்களின் அளவுகளை ஒப்பிட்டு ப்பார்த்து இரண்டும் ஒரே அளவினதாக இருக்கவே இது ஃபைல் வகை வைரஸ் இல்லைஎன்று முடிவுக்கு வந்தேன்.

அடுத்து பூட் செக்டார் பகுதியை சோதனை செய்யலாம் என்று நினைத்தேன். வைரஸ் உள்ள மற்றும் இல்லாத டிஸ்குகளின் பூட் செக்டார் பகுதியை படித்து இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை பார்க்க திட்டமிட்டேன். சரி பூட் செக்டார் பகுதியை எப்படி படிப்பது என்று அடுத்து பிரச்சினை வந்தது. டிஸ்கில் உள்ள ஒரு பைலை படிப்பது சுலபம் அதற்கென க்ட்டளைகள் உள்ளன, அதன் மூலம் திறந்து, படித்து, எழுதி மற்றும் மூடலாம். ஆனா பூட்‍செக்டாரை படிக்க எந்த கட்டளையும் இல்லை.

BDPS பயிலகத்தில் படிக்கும்பொழுது GWBASIC என்ற மொழியில் Basic நிரலாக்கம் பயின்று கொன்டிருந்தேன், அப்பொழுது GWBASIC இல் உள்ள அனைத்து கட்டளைகளையும் படித்து செயற்படுத்தி பார்த்துக்கொன்டிருப்பேன்.
அதில் உள்ள DEFSEG , CALL, PEEK மற்றும் POKE கட்டளைகள் எதுக்குன்னே புரியலை அவைகள் எல்லாம் சற்று உயர் நுட்பத்துக்கனவை மற்றும் அசெம்பிளி( ASSEMBLY language ) மொழி சம்பத்தப்பட்டவை என்று தெரிந்தது உடனே அசெம்பிளிமொழி பற்றிய புத்தகங்கள் வாங்கி படித்தேன்.

1). பீட்டர் நார்டன் ( Peter Norton ) அவர்கள் எழுதிய Assembly Language Book for the IBM PC

2). பீட்டர் ஏபெல்(Peter Abel ) அவர்கள் எழுதிய Assembly Language and Programming

.இவை இரண்டும் நான் வாங்கிப்படித்த புத்தகங்கள்.
அதன் மூலம் அசெம்பிளிமொழி கற்று அதை GWBASIC இல் இயக்கிப்பர்த்தேன் ஒன்றும் சுவாரசியமாக இல்லாமல் போகவே அதை அப்பொழுதே விட்டுவிட்டேன். அது மீன்டும் சுவாரசியமாக்கும் தருனம் வந்துவிட்டது.

ஆமாம், கணணி உயர் நுட்பப் பிதா மகன் பீட்டர் நார்டன் ( Peter Norton ) அவர்கள் எழுதிய Assembly Language Book for the IBM PC ..என்ற புத்தகத்தில் பூட்செக்ட்டாரை அசெம்பிளி மொழி பயன்படுத்தி, எப்படிப்படிப்பது என்று விளக்கப்பட்டிருந்தது. அதை வழியாகக்கொன்டு ஒரு நிரலை GWBASIC மூலம் எழுதி இயக்கி பூட்செக்டாரை படிக்கும் வழியறிந்தேன்.

முதலில் வைரஸால் பாதிக்கப்பட்ட பிளாப்பிமூலம் கணணியை ஆரம்பித்து வைரஸை இயக்கத்தில் இருக்குமாறு செய்துவிட்டு. வைரஸ் பாதித்த பிளாப்பியில் உள்ள பூட் செக்டாரை படித்து அதில் உள்ளவைகளை குறித்து வைத்துக்கொன்டேன். பிறகு வைரஸ் இல்லாத பிளப்பி மூலம் கணணியை ஆரம்பித்துவிட்டு மீன்டும் வைரஸ் பாதித்த அதே பிளாப்பியில் உள்ள பூட்செக்டாரை படித்துப்பார்த்தேன்.

(இந்நிரலை இயக்கும்பொழுது என் மனது பட பட வென அடித்துக்கொன்டது, ஒரே பிளாப்பியில் இருக்கும் பூட்செக்டாரில் உள்ளவைகள் வைரஸ் இருக்கும்போது ஒருமாதிரியாகவும் வைரஸ் இல்லாதபோது வேறுமாதிரியாகவும் இருப்பது சுவாரசியம் மிகுந்ததல்லவா? அதை நாமே செயல் முறையில் உணர்வது அதை விட சுவாரசியம் அல்லவா? மேலும் நான் நினைப்பது சரியா இல்லையா என்றும் தெரியாத நிலையில் அதைத்தெரிந்துகொள்ளப்போகும் தருனம் மிக்க சுவாரசியமாகப்பட்டது (இதைவிட சுவாரசியமான தருனங்கள் என் வாழ்வில் 3 முறை ஏற்ப்பட்டது). )

அதில் உள்ளவைகளை குறித்துக்கொன்டு முன்பு படித்த விவரங்களோடு (மூச்சுவிட மறந்து) ஒப்பிட்டுப்பார்த்தேன். வித்தியாசமாக இருந்தது. யுரேகா என்று கத்தவில்லை எனது மாணவர்களை அழைத்து அதை விளக்கினேன் அவர்கள் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொன்டு நமட்டு சிரிப்பு சிரித்துக்கொன்டனர்.

உடனே செயலில் இறங்கி கீழ்கன்டவைகளை செயற்படுத்தினேன்.

1). ஒரு பிளாப்பி NewBug வைரஸால் பாதிக்கப்பட்டதா? என்று கன்டுபிடிக்க:
ஆந்த பிளாப்பியின் பூட் செக்டாரில் குறிப்பிட்ட அந்த ( NewBug வைரஸ் சம்பதப்பட்ட) விவரங்கள் இருந்தால் NewBug வைரஸால் பாதிக்கப்பட்டது என்றாகும்.

2). அதை எப்படி நீக்குவது?
பாதிக்கப்பட்ட அந்த பிளாப்பியின் பயன்படுத்தப்படாத வேறொரு செக்ட்டாரில் வைரஸ் இல்லாத பூட் பகுதி இருக்கும். அதை படித்து, வைரஸ் பாதித்த அந்த பூட்‍செக்டாரின் மேலெழுதிவிடவேன்டும்.

3). வைரஸ் இயக்கத்தில் உள்ளபோது கன்டுபிடிக்க முடியாதே அப்பொழுது என்ன செய்வது?
கணணியின் நினைவகத்தில் குறிப்பிட்ட அந்த ( NewBug வைரஸ் சம்பதப்பட்ட) விவரங்கள் இருந்தால், வைரஸ் இயக்கத்தில் உள்ளது என்றறிந்து வைரஸ் இல்லாத பிளாப்பி வழியாக கணியை ஆரம்பிக்க அறிவுறுத்தி எச்சரிக்கை செய்தி வெளியிடலாம். (கணணியின் நினைவத்தில் உள்ளவைகளி படித்து சோதிக்க மற்றும் மாற்றியமைக்க GWBASIC மொழியில் PEEK மற்றும் POKE கட்டளைகள் பயன்படுத்தப்படுகின்றன.

எனது வைரஸ் நீக்கி பற்றி அடுத்து பார்ப்போம்.

தொடர்ச்சி இங்கே (எனது VAV மற்றும் VVN வைரஸ் நீக்கிகள்)

Wednesday, August 06, 2008

விஜய் கம்ப்யூட்டர்ஸ் உசிலம்பட்டி (பாகம் 4)

(இதைப்படித்து விட்டு இங்கே வரவும் (என‌து முத‌ல் க‌ண‌ணிப்ப‌ணி)

கணணிப்பயிலகம் ஆரம்பிக்க நினைத்து உடனே செயற்படுத்தினேன். மதுரை யில் உள்ள SSI நிறுவனத்திடம் நாற்ப்பத்தைந்தாயிரம் ரூபாய் கடன் வாங்கி, ஒரு சிவா பெர்சனல் கணனி 64கே நினைவகம், இரண்டு 360கே பிளாப்பிடிரைவ், வெள்ளை த்திரை, செர்வோ யூபிஎஸ், 80 காலம் எப்சன் டாட்மாட்ரிக்ஸ் பிரின்டர், 4 டெஸ்க் மற்றும் பென்ச் அனைத்தும் வாங்கி உசிலம்பட்டியில் உள்ள சங்கராமூர்தியா பிள்ளை தெரு வில் கனரா வங்கிக்கு அருகில் 800 ரூபாய் மாதவாடகை பிடித்து விஜய் கம்ப்யூட்டர்ஸ் ஆரம்பித்துவிட்டேன். வகுப்புகள் பேசிக், போர்ட்ரான், கோபால், மற்றும் டிபேஸ்3. மூன்றுமாத பயிற்சி 700 ரூபாய்க்கட்டனம் என்று ஆரம்பித்தாகிவிட்டது. ஆரம்பித்த புதிதில் 5 பேர் வந்து படித்தனர், அவர்களும் புரிந்த்துகொள்ள மிகக்கடினமாக இருக்குன்னு சொல்லி பாதியில நின்றுவிட்டர்கள் பிறகு உசிலம்பட்டியில் இருக்கும் பள்ளிகளுகெல்லாம் சென்று தலைமை ஆசிரியர்களை சந்தித்து மாணவர்களிடம் சொல்லசொன்னேன், அவர்களும் ஆதரவளித்தார்கள் விஜய் கம்ப்யூட்டரில் மாணவர்கள் கூட்டம் அலை மோதியது. குறிப்பாக உசிலம்பட்டியில் உள்ள S.D.A பள்ளியிலிருந்து நிறைய மாணவர்கள் வந்து படித்தனர். எப்படியோ வரவுக்கும், பராமரிப்புக்கும் சரியாகத்தான் போய்க்கொன்டிருந்தது.

அப்பொழுதுதான் எனது சித்தப்பா சங்கர‌பான்டி (விக்கிரமங்கலம் ஊரில் மெடிக்கல்ஸ் வைத்திருக்கின்றார்) அவர்கள் தனது மெடிகல் கடையின் கணக்குப்பதிவினை கணணியில் போட்டுத்தரும்படி கேட்டார். அவருக்காக COBOL நிரலில் ஒரு கணக்கு மென்பொருள்தயார்செய்து அவரது கணக்குபதிவுகளைபோட்டு பேரேடுகள், லாபநட்ட கணக்கு மற்றும் ஐந்தொகை தயார்செய்து கொடுத்தேன். அதுக்கு 300 ரூபாய் கொடுத்தார். பிறகு அதையே FOXPRO வில் தாரித்து உசிலம்பட்டியில் இருக்கும் V.K.S.பிஸ்கட் நிறுவணத்துக்கு 7000 ரூபாய்க்கு விற்றேன். SOFT ENTRY என்ற பெயர் கொன்ட அந்த மென்பொருள் உன்மையில் TALLY package ஐ விட எளிமையான முறையில் பயன்படுத்தும் வகையில் இருந்தது. தினக்குறிப்புகளை மட்டும் பதிந்தால் போதும் அதுவே அனைத்து இடங்களிலும் பதிவுசெய்து பேரேடு, லாபநட்ட கணக்கு மற்றும் ஐந்தொகை கணக்கு அனைத்தும் உடனே தயாராகிவிடும். இதனை கேள்விப்பட்டு உடனே உசிலம்பட்டியில் இருக்கும் பெரீஸ் பிஸ்கெட் நிறுவனம், S.M.S.R உர நிறுவனம், கண்மார்க் ஊறுகாய் நிறுவனம் அனைவரும் இம்மென்பொருளை வாங்கி உபயோகித்தனர்.

பெரீஸ் பிஸ்க்கெட் நிறுவன உரிமையாளர் திரு.பெரீஸ் மகேந்திர வேல் அவர்கள் என்மீது நம்பிக்கை வைத்து நிறையா வாயிப்புகள் கொடுத்தார். அனைத்தையும் வெற்றிகரமாக முடித்தேன். அவரது வியாபார தொடர்புகள்மூலம் நிறைய வாய்ப்புகள் வந்தன.

கணக்குப்பதிவுமட்டுமல்லாமல் சரக்கிருப்பு பராமரிப்பு, விற்பனை போன்ற மென்பொருள்களும் தயாரித்து விற்ற ஆரம்பித்தேன், நன்றாக விற்பனையானது. மெதுவாக மதுரை, தேனி, பெரியகுளம், தின்டுக்கல், திருநெல்வேலி ஆகிய ஊர்களிலும் விற்பனை செய்தேன்.

இடையே உசிலம்பட்டியில் உள்ள S.D.A பள்ளியில் பகுதி நேர கணணி ஆசிரியர் வேலைக்கு வரும்படி கேட்டனர் மாணவர்களிடையே விஜய் கம்புயூட்டஸ் க்கு நல்ல‌ பெயர் வரும் என்று என்னி சரி என்று சேர்ந்துவிட்டேன். மாணவர்களுக்கு செய்முறை வகுப்பில் செயல் கொடுக்க சரியான மென்பொருள் இல்லாத காரனத்தினால் நானே எளிமையான வினா எழுப்பி பதில்வாங்கி சரியா தவறா என்று சொல்லும் மென்பொருள் தயாரித்தேன் அதை மாணவர்களுக்கு செயல்முறை வகுப்பில் கொடுத்தேன், பள்ளியின் முதல்வர் ஜான்சன் அவர்கள் அதைபார்த்து இதைப்போலவே இன்னும் நிறைய செய்யசொன்னார் இதேவகையில் எழு வித்தியாசமான மென்பொருட்க்கள் செய்து அதை 500 ரூபாய்க்கு அதே பள்ளியில் விற்றேன். பிறகு அதையும் பள்ளிகளில் 4500 ரூபாய்க்கு விற்க ஆரம்பித்தேன், நல்ல அமோகமான வரவேற்பு இருந்தது. டாஸ் ஆபரேடிங் முறையில் இயங்கும் அந்த மென்பொருட்களானது டர்போ பேசிக் மற்றும் டர்போ பாஸ்கல் மூலம் உருவாக்கப்பட்டது ஆகும். வின்டோஸ் புழங்கப்படாத அந்த காலத்தில் எனது மாணவர்களுக்கான் மென்பொருட்கள் மதுரை மாவட்டத்தின் பள்ளிகளுக்கிடையே மிகவும் பிரசித்தம். ஏதாவது பள்ளியில் புதிதாக கணணி வாங்குகிறார்கள் என்றால் நான் அங்கே சென்றுவிடுவேன், விற்பனை நிச்சயம்.
இதைத்தொடர்ந்த்து பள்ளிகளுக்கு சம்பளப்பட்டியல் தாயாரிக்கும் மென்பொருள் செய்து தரும்படி உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல் நிலை பள்ளி யிலிருந்து கேட்டர்கள் செய்து கொடுத்தேன் அதைத்தொடர்ந்து உசிலை T.E.L.C. மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் கணணிவாங்கி எனது மென்பொருட்களை உபயோகித்தனர்.

1993ம் வருடம் உசிலம்பட்டியில் பெரும்பாலான நிறுவனங்கள், பள்ளிகளில் எனது மென்பொருட்ட்களை உபயோகித்து கணணிகளை முழுவீச்சில் உபயோகித்துக்கொன்டிருந்தனர். அந்த காலக்கட்டத்தில் தமிழ்நாட்டிலேயே வைத்து வியாபரத்தலங்களில் கணனி முழுஅளவில் உபயோகப்படுத்தப்பட்ட இடம் உசிலம்பட்டி கிராமமாகும் அது எனக்கு பெருமையாக இருந்தது.

ஒருநாள் மதுரையில் உள்ள ஒரு பள்ளியின் தாளாளரிடம் எனது மென்பொருட்களை பற்றிய செய்முறை விளக்கத்துக்காக அனுமதி வாங்கியிருந்தேன். நீன்டநாட்களாக கேட்டிருந்த எனக்கு மனமிறங்கி ஒருநாள் ஒதுக்கினார். அதற்கு முந்தியநாள் செய்முறை விளக்கத்துக்கான டிஸ்க்குகளை தயார் செய்துகொன்டிருந்தேன். செய்துமுடித்ததும் இயக்கிப்பார்த்தேன் எதுவுமே இயங்கவில்லை. குழப்பமாகி வேரு ஒரு பிளாப்பியில் தாரித்துப்பார்த்தும் இயங்கவில்லை கணனியில் பழுதா இல்லை மென்பொருள் நிரலில் தவறா இல்லை பிளாப்பி யில் பழுதா என்று குழம்பிவிட்டேன். சரி மாலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். ஆனால் எனக்கு அப்பொழுது தெரியாது எனது கணணி ப்பாதையின் திசை அன்றைய மாலைப்பொழுதில் புரட்டிப்போடப்பட போகிறது என்று. ஆமாம் எனது வாழ்கைத்தொழிலின் போக்கு அன்றிரவு புரட்டிப்போடப்பட்டது.

தொடர்ச்சி இங்கே (வைரஸுடனான முதல் அனுபவம்)