(இதைப்படித்து விட்டு இங்கு வரவும் ( எனது VAV மற்றும் VVN வைரஸ் நீக்கிகள் )<
1992 லிருந்து 1994 வரைக்கும் உசிலம்பட்டியில் ஓரளவுக்கு கம்ப்யூட்டர் பிரபலமாகி பள்ளிகள் மற்றும் வணிகத்தலங்களில் உபயோகிக்க ஆரம்பித்ததில் முழுப்பங்கும் என்னுடையதுதான். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிஸ்க்கெட் உற்பத்தி கம்பெனிகளுக்கு சென்று கணனி உபயோகத்தை சொல்லி சொல்லி வாங்க வைத்து விட்டேன். V.K.S பிஸ்க்கெட், பெரீஸ் பிஸ்க்கெட், கண் மார்க் ஊறுகாய், ஆர்.சந்திரபோஸ் உரக்கடை, S.D.A ஆங்கிலப்பள்ளி, நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி, T.E.L.C பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் முழு அளவில் கம்ப்யூட்டரை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த காலகட்டத்தில் கம்ப்யூட்டரை முழுஅளவில் உபயோகித்து உசிலம்பட்டி மட்டுமே, இது வெளியில் தெரியாத ஒரு சாதனை ஆகும்.
அந்த கால கட்டத்தில் தமிழ் கம்ப்யூட்டர் என்றொரு பத்திரிக்கை பிரபலமாக இருந்தது. அந்த பத்திரிக்கையின் ஆசிரியருக்கு என்னைப்பற்றியும் எனது கணணி பயிலகததையும் பற்றிய குறிப்பு எழுதி அனுப்பியிருந்தேன், அதைக்கன்டு ஆச்சரியப்பட்ட அந்த பத்திரிக்கையின் ஆசிரியர் திரு ஜெயகிருஷ்னன் அவர்கள் என்னை சென்னைக்கு வரும்பொழுது சந்திக்கச்சொன்னார். சந்தித்தேன். அதே பத்திரிக்கையில் தன்னார்வ எழுத்தாளராக இருந்த டாக்டர் சி.சந்திரபோஸ் அவர்கள் என்னைப்பற்றிய கட்டுரை எழுதினார், தமிழ் கம்ப்யூட்டர் இதழில் வந்த இந்த கட்டுரை என்னை தமிழ்நாடு அளவில் பிரபலமாக்கியது. என்னை உசிலம்ப்பட்டியிலிருந்து வெளிஉலகத்துக்கு கொன்டுவந்தது திரு ஜெயகிருஷ்னன் சார் மற்றும் டாக்டர் சி.சந்திரபோஸ் சார் இவர்களே. இவர்களால்தான் நான் ஜப்பான் மற்றும் அமெரிக்காவந்து பணியாற்றி எனது திறமைகளை காட்டலாயிற்று.
அதன் தொடர்ச்சியாக தமிழ் கம்ப்யூட்டர் பத்திரிக்கையில் நிறைய கட்டுரைகள் எழுதினேன். கம்ப்யூட்ட்ரைல் மிக உயர் நுட்ப்பங்களைப்பற்றி, வைரஸ்கள் குறித்து நான் எழுதிய கட்டுரைகள் மிகவும் ப்ரபலமானது அதன் வாயிலாக நானும் பிரபலமானேன்.
தமிழ்நாடு முழுதுமிருந்து வாசகர்கள் மானவ மானவிகள் கடிதம் எழுதினார்கள். சந்தேகம், நிவர்த்தி என்று வாசகர்கள் வட்டம் பெருகலாயிற்று. மானவ மானவிகள், வாசகர்களின் பாசம் நிறைந்த கடிதங்களை இன்னும் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருக்கின்றேன்.
[தமிழ் கம்ப்யூட்டர் இதழில் வந்த கட்டுரை]
தொடர்ச்சி இங்கே
எனது தயாரிப்புகள் குறித்த விளக்க உரைகள்