Tuesday, July 07, 2015

இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம்



எங்கள் ஊருக்கு அருகில் உள்ள போடி, பொட்டிபுரம் மலையில் அமைந்துள்ள இந்திய #நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தைப் பற்றிய எதிர்மறையான மற்றும் மக்களுக்கு பயம் ஊட்டக்கூடிய  செய்திகளை பரப்பியவன்னம் இருக்கின்றார்கள் தமிழக அரசியல்வியாதிகள்.

மலைவளம் அழிந்துவிடும், பயங்கரமான கதிர் இயக்கம் எற்ப்பட்டு மக்கள் பாதிக்கப்படுவார்கள், நிலநடுக்கம் வரும் அப்படி இப்படி என்று.

அத்தனையும் பொய். மலை வளத்துக்கும் மக்கள் நலத்துக்கும் ஒரு பொட்டு பாதிப்புகூட வராது.

அணுவை உடைத்துப் பிளக்கையில் உதிரும் சிறிதும் பெரிதுமான துகள்களில் #நியூட்ரினோ வும் ஒன்று. இந்தத் துகளானது எந்த ஒரு பொருளையும் ஊடுருவிச் செல்லக்கூடியது. சூரியனில் ஏற்ப்பட்டுக்கொன்டே இருக்கும் ஹைட்ரஜன் அணு இனைவு மோதலால் வெப்பக்கதிர்கள் உண்டாகின்றது, அதுதான் சூரிய ஒளி, அது பூமிக்கும் மற்றும் திக்கெங்கும் பரவுகையில் அதனுடன் வெளிப்பட்ட நியூட்ரினோ துகளும் பரவுகின்றன. எதிர்ப்படும் எவற்றையும் ஊடுருவிச்சேலும் திறன் கொன்டவைகளாய் இருக்கின்றன.நீங்கள் இதைப்படிக்கும் நேரத்தில் கோடானு கோடிக்கணக்கான #நியூட்ரினோ துகள்கள் உங்களை துளைத்துச் சென்றவன்னம் இருக்கின்றன.
மன்னிக்கவும்  இப்படியெல்லாம் இருக்கும் என்று நம்பப்படுகின்றது.

கணக்கீட்டு விடைகளும், தர்க்க ரீதியிலான முடிவுகளும் இப்படித்தான் அனுமானிக்கச்சொல்லுகின்றன. அணுக்களை மோதவிட்டு பிளந்து ஆராய்சி செய்யும் விஞ்ஞானிகளும் உறுதியாக உள்ளது என்றுதான் சொல்லுகின்றனர். ஜெனீவா வில் உள்ள Large Hadron Collider தான் உலகில் பெரிய அணுப்பிளப்பு கூடம் இருக்கின்றது,

அமெரிக்காவில் உள்ள Fermilab, Illinois ஆய்வுக்கூடம் ஆராய்ந்து ஆராய்ந்து பார்த்து ஒன்னும் கிடைக்காமல் , நிதி போதவில்லை என்று தன்னிடம் இருந்த Tevatron அணுப்பிளப்பு கூடத்தை 2011ம் ஆண்டு ஊத்தி மூடிவிட்டது.

இன்னும் பல பெரிய நாடுகள் அணுப்பிளப்பு மற்றும் நியூட்ரினோ துகள் பிடிப்புக்கூடங்களை வைத்துக்கொன்டு அராய்ந்துகொன்டே இருக்கின்றன.

சரி நியூட்ரினோ துகளை கன்டுபிடிபதில் என்ன பயன் ஏன் இத்துனை செலவு? ஏன் இத்துனை போட்டி?

யோசித்துப்பாருங்கள், அணுவில் உள்ள எலெக்ட்ரான் துகள் கன்டுபிடிக்கப்பட்டபின் எப்பேர்ப்பட்ட அறிவியல் புரட்சி ஏற்ப்பட்டது? மனிதனின் உயிர்வாழ்வின் முறையும் நோக்கமும் முற்றிலும் மாற்றப்படது எலெக்ட்ரான் கன்டுபிடிப்பால்தான். பொழுதுபோக்கு அம்சம் தவிர மருத்துவத்துறையில் இதன் முக்கியத்துவம் சொல்லி மாளாது. MRI ஸ்கேன் ஒன்றுபோதும் இதன் மகத்துவத்தை விளக்க.

அதுபோல நியூட்ரினோ துகளும் கன்டுபிடிக்கப்பட்டு அதனை கட்டுப்படுத்தும் வித்தையும் மனிதன் பெற்றால் அதன் பயன்பாடுகள் மிக்க்க்க்க்க்க்க மலைப்பாக இருக்கும்.

கண்ணி வைத்து கானாங்குருவியை பிடிப்பதுபோலத்தான், அதற்க்கு வாகான பாறைகளைக்கொன்ட போடி மலைப்பகுதி இந்தியாவிலேயே சிறந்தது என்று தேர்வாகி சுத்தமான நீர் நிரம்பிய பாத்திரங்களை மலைப்பறைகளுக்கு அடியில் குகையில் வைத்து கத்திருக்கின்றனர்.

சுற்றுக்கும் மக்கள் உடல் நலத்துக்கும் தீங்கு வர வாய்ப்பே இல்லாவிட்டாலும், இது உலகமயமாக்காலின் மற்றொரு முதலீடுதான். தமிழக மக்கள் முழுமூச்சாக உலக மயமாக்கலை ஏற்றுக்கொன்டு அதனுடன் ஒத்துப்போய் பழகி பயனித்தால் நல்லதுதான் சந்தோசம்தான்.
இல்லாவிட்டால், இது கண்டிப்பாக ஒரு வர்க்க வேறுபாட்டையும் முரன்பாட்டையுமே உன்டாக்கி மிகப்பெரிய பிரச்சினையை உண்டுபன்னும். வடநாடுகளில் சாதரனமான இந்தப் பிராசினைகள் தென் தமிழ்நாட்டில் நுழையும் வாசலாகக் கூட இது மாறலாம்.

இதன் பயிற்சி அனுமதிக்கு தேர்வாகியிருக்கும் மாணவர்கள் பெர்களைப்பார்த்தால் அப்படித்தான் ஆகும் போலத்தெரிகின்றது.

http://www.ino.tifr.res.in/ino//admission.php


 List of students selected for INO Graduate Training Program - 2015

Based on the combined performance in the written test as well as in the interviews, the following students were selected for the INO Graduate Training Programme 2015, starting in August 2015.

Sl.No Ref.Code Title Name
1 69897 Mr Prasant Kumar Rout
2 61062 Mr Dhruv Dinesh Mulmule
3 84354 Mr Jaydeep Datta
4 64782 Ms Samadrita Mukherjee
5 85653 Ms Kaustav Chakraborty
6 72884 Ms Aparajita Mazumdar
7 73790 Mr Soumyadip Halder
Offer letters along with other necessary information will be send to these students by e-mail by 19-06-2015, while originals of the same were sent by Speed Post to the postal addresses supplied by the students in their application forms.

The students were requested to send their acceptance along with refundable hostel deposit by July 10, 2015. If we do not receive their reply by the stipulated date, it will be presumed that they are not interested in the offer. The selected students are expected to join the programme on July 31, 2015





Wednesday, July 01, 2015

ஶ்ரீசக்கரம் பித்தலாட்டம் (Oregon Desert Sri Yantra fake)

சமீப காலமாக வாட்ஸப் மற்றும் சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி பரவிவருவதைப் பார்த்திருப்பீர்கள்.

"இந்துவாக பிறந்த ஒவ்வொரு வரும் படித்து ஷேர் செய்ய வேண்டிய செய்தி இது.
அமெரிக்காவின் ஒரெகன் மாநிலத்தின் பாலைவணப் பகுதியில் 13 மைல் நீளத்துக்கு. இந்துக்களின் புனித ஆயுதமான ஶ்ரீசக்கரம் வரையப்பட்டிருக்கு, இது மனிதர்களால் முடியாத காரியம்" இந்துக்களின் பெருமையை உலகம் உணரவேன்டிய தருனம் இது"

உண்மையில் இந்த வரைபடம் கானப்பட்டது உன்மைதான், இதை வரைந்தது Bill Witherspoon எனும் ஆராய்ச்சியாளர் மற்றும் அவரது குழுவினர்தான்.

 எதைச்சொன்னாலும் நம்பும் ஒரு கூட்டம்தான் இந்த உலகில் நிறைய இருக்கின்றதே. அதில் ஒரு கூட்டம்தான் இது.

Fairfield, Iowa 52556 எனும் முகவரியில் செயல் படும் "Sri Yantra Research Center" எனும் அமைப்புதான் இந்த ஶ்ரீசக்கரம் குறித்த ஆராய்ச்சியை முடுக்கிக் கொன்டிருக்கின்றது. அது விடும் கதையில் மயங்கித்தான் ,  Bill Witherspoon மற்றும் அவரது குழுவினர் கண்ட இடங்களில் இதை வரைந்து அதன் விளைவுகளை ஆராய்ந்து வருகின்றனர்.

அந்த அமைப்பின் வலைத்தளத்திலேயே இதைச்சொல்லுகின்றனர்.

http://www.sriyantraresearch.com/Article/Effects/Sri_Yantra_Effects.html

இதன் முகப்புப் பக்கத்தில் பார்த்தால் சாயம் உஅடனே வெளுத்து விட்டது. அதில் ஒரே வாஸ்த்து, மற்றும் ஓம் குறித்த விளக்கங்களாகவே இருக்கு. யாரோ இருக்கார் பின்னாடி.

கடவுள் நம்பிக்கை இருக்க வேடியதுதான், அதுக்குன்னு இப்படியா?

நம்ம மக்களும் இதை சிலாகித்து பகிர்வது வேடிக்கையாகவே இருக்கு. இப்போதைக்கு 1000 பெரியார்கள் தேவை.