Saturday, January 14, 2017

வெளிநாட்டு தமிழர்களும் ஏன் ஜல்லிக்கட்டு தடையை எதிர்க்கின்றார்கள்?


ஜல்லிக்கட்டு என்பது தமிழ் கலாச்சாரத்தின் அடையாளம் என்பது கேள்விக்குரியது என்று R.J.பாஸ்கர் இந்தியா டுடே விவாதத்தின் போது நெறியாளர் சொன்னதை எத்துனை பேர் கவனித்தீர்கள் என்று தெரியவில்லை.


தென் தமிழ்நாட்டு கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு மட்டுமே தெரியும் ஜல்லிக்கட்டை தடை செய்ததன் உன்மையான வலி என்பது. நகரங்களிலும், இனையத்திலும் ஏன் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களும் ஏன் தடையை எதிர்த்துப்போராடுகின்றார்கள் என்று தெரியலையா?

அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், ஐரோப்பாவிலும் மற்றும் உலகெங்கும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்றா ? இல்லை?

தமிழர்களின் அடையாளங்களை அழிப்பதை எதிர்த்துதான்.
 ஜல்லிகட்டை எதிர்க்கும் நான்தான் உன்மையான தமிழன். மாடு பிடிக்கும் காட்டுமிராண்டி தமிழானே இல்லை என்ற கருத்தை நிறுத்தும் அதிகாரத்தை எதிர்த்துதான்.
தமிழர்கள் எங்களுக்கு அடங்கித்தான் கிடக்கனும், நீ என்ன செய்யனும்ன்னு நான்தான் முடிவு பன்னுவேன் எனும் ஆனவத்தை எதிர்த்துத்தான்.