Tuesday, November 24, 2015

லூசி

#Lucy
இன்றைய கூகிள் டூடுல், லூசியை கவுரவப்படுத்தி இருக்கின்றது.

#லூசி என்பவள் 32 லட்சம் வருடத்துக்கு முந்தைய மனுசி ஆவாள். உன்மையில் சொல்லப்போனால் குரங்குக்கும் இன்றைய மனிதனுக்கும் இடைப்பட்ட இனம் . என்றாலும் இவளே நமது மூத்த முன்னோர் ஆவாள்.

1974 ம் ஆண்டு எத்தியோப்பியாவில் இவளது உடல் படிமங்கள் கன்டுபிடிக்கப்பட்டன. இரண்டு கால்களால் எழுந்து நடந்த முதல் குரங்கு (அல்லது மனித) இனம் என்று கன்டறியப்படநு.

மனித இனத்தின் ஆரம்பம் மற்றும் பரினாம வளர்ச்சி ஆனது மிகவும் புதிர் ஆனது ஆகும். இது தற்செயலாக நடந்தது அல்ல என்று உறுதியாக சொல்லாம். ஏனென்றால் மனிதன் இன்னும் பரினாம வளர்ச்சி என்ற பாதையில் பயணித்து போய்க்கொன்டிருக்கின்றான். எதை நோக்கியோ நாம் பயணித்துக்கொன்டிருக்கின்றோம்.

இதை கன்டுபிடித்து என்ன ஆகப்போகின்றது? அழகாக வாழ்ந்து அனுபவிக்கத்தானே வாழ்க்கை கொடுக்கப்பட்டு இருக்கு என்று சமாதனப்படுத்திக்கொள்ள முடியவில்லை. வாழ்க்கையின் நோக்கம் அனுபவிக்க மட்டும் அல்ல என்று உறுதியாக நம்புகின்றேன்.

சாவே அடையாத உயிரினமானது இனவிருத்தி செய்யாது, மனிதனின் ஆயுட்க்காலம் நூறு ஆண்டுகளுக்கு குறைவானதால் தனது குனங்களை மற்றும் பண்புகளை மரபணு(Gene) மூலம் தனது சந்ததிகளுக்கு கடத்துகின்றான். அதுவும் பல சந்ததிகளை மற்றும் உடல்களை கடந்து எங்கோஓஓஓஓ பயணித்துக்கொன்டேஏஏஏஏஏஏஏ இருக்கின்றது. இதன் துவக்கமும் முடிவும் என்னவாக இருக்கும் என்று மன்டையை பிய்த்துக்கொன்டே இருக்கின்றேன்.

32 லட்சம் வருடத்துக்கு முன்னர், காடுகளிலும் மலைகளிலும் அலைந்து கொன்டிருக்கும் லூசியை சந்திக்க நேர்ந்தால் எப்படி இருக்கும்? என்ன என்ன கேள்விகளை எல்லாம் கேட்க்க மனது துடிக்கும்.

லூசி திரைப்படத்தில், கதையின் நாயகி ஒரு கடத்தல் கும்பலால் வயிற்றில் போதைப்பொருள் தினிக்கப்பட்டு அதில் ஒன்று உடைந்து அவள் ரத்தத்தில் கலந்துவிட, அவள்  மற்றவர்களின் மனங்களை படிப்பது, மிகக்கடினமான கணக்கீடுகளுக்கு விடை கானுவது போன்ற அமானுஷ்ய சக்தியினை பெறுகின்றாள். உடையாத மற்ற போதை குப்பிகளை கன்டுபிடித்து மருத்துவர் மூலம் தன் உடம்பில் அனைத்தையும் செலுத்தி, வாழ்க்கையின் நேரத்தின் பின்நோக்கி பயனித்து முடிவில்  இந்த பிரபஞ்சத்தோடு பிரபஞ்சமாக கலந்து விடுவாள்.

வாழ்க்கையின் நேரத்தின் பின்நோக்கிய பயணத்தில் டைனோசர் காலத்தை கடந்து லூசியை சந்திப்பாள். லூசியில் விரலை தொடும் காட்சியானது அற்புதமாக இருக்கும். பிறகு பூமி உண்டான காலத்தியும் கடந்து பயணிப்பாள். பாருங்கள்.

https://www.youtube.com/watch?v=jCwVtbYiOqc