Tuesday, December 08, 2015

ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட்

#ஆப்பிள்  (#Apple) நிறுவனமானது உயிர் விடும் தருவாயில் இருந்த காலம்  அது. 1997ம் ஆண்டு #மைக்ரோசாப்ட் (#Microsoft) நிறுவனத்தின் மீது போட்டியில்லத சர்வாதிகாரமான வியாபார அழுத்தங்கள் என்று பல்வேறு வழக்குகள் இருந்தன. அந்த காலகட்டத்தில் அந்த அவப்பெயரை நீக்க மிகவும் எளிமையான வலுவில்லாத போட்டியாளரை களத்தில் இறக்குவது என்று அதன் நிறுவனர் பில்கேட்ஸ் முடிவு செய்தார். அவர்தேர்ந்தெடுத்த அந்த நோஞ்சான் போட்டியாளர் ஆப்பிள் நிறுவனம். அதன்மீது 15 மில்லியன் டாலர்களை (சுமார் 100 கோடி ரூபாய்) 1997ம் ஆண்டு முதலீடு செய்தார். அதிலிருந்து ஆப்பிளுக்கு ஏறுமுகம்தான். படபடவென உயர்ந்து மைக்ரோசாப்டை முந்திச்சென்றுவிட்டது. பில்கேட்ஸ் ஒன்றும் செய்ய முடியவில்லை நம்பியார் மாதிரி கடுகடுஎன்று கையை பிசைந்து கொன்டு வாழுங்கள் நன்றாக வாழுங்கள் என்று சொல்லத்தான் முடிந்தது.

இன்றையமதிப்பில் ஆப்பிளின் சந்தை மதிப்பானது 43 லட்சம் கோடி ரூபாய், மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்  சந்தை மதிப்பனது  29 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

2 நாட்க்களுக்கு முன்னார் சன் ஹொசே நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் எதிரெதிராக இரண்டு வைரிகளின் கடை விரிப்பில் மூலம் மக்களின் இதையங்களை கவரும் முயற்சியில் ஆப்பிளின் வெற்றி தெரிந்தது. (வீடியோ இனைப்பு கீழே)

வள்ளுவரின் திருக்குறள் நினைவுக்கு வந்தது.

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.