Wednesday, June 24, 2015

கற்றை இயக்கவியல் கவிதை


கற்றை இயக்கவியலை (Quantum mechanics) திருக்குறள் போல சுறுக்கென்று சொல்லும் வாக்கியத்தை தமிழில் யோசித்துக்கொன்டே இருந்தேன்.
இறுதியில் பெற்றேன், செந்தமிழ் அறிவியலார் முனைவர் சுப்பராமன் இடம் இருந்து.


"அலையோ? துகளோ?
அலையோ ஒளியது மின்றித் துகளோ
அலையெனக் கொள்ளின் அலையாம்- அலையிலை
என்னில் துகளாமே ஆற்றும் நிலையொன்றும்
தன்மையைக் கொண்டே தரம்."



Sunday, June 21, 2015

காலப் பயணம் சாத்தியமா? சிறப்புச் சார்பியல் பொதுச் சார்பியல் பற்றிய அலசல்

சமீபத்தில் வெளிவந்து கலக்கிய Interstellar திரைப்படத்தில் தந்தை தனது 40 வது வயதில் தன் 12 வயது மகளை பிரிந்து விண்வெளிப்பயணத்துக்கு செல்வார்.
விண்வெளியில் அவருக்கு 2 வருடங்கள் கடந்த நிலையில் பூமியில் சுமார் 80 வருடங்கள் கடந்திருக்கும்.
தந்தையும் மகளும் மீன்டும் சந்திக்கும் இறுதிக் காட்சியில், மகள் மிகவும் முதுமையடந்த நிலையில் சாகும் தறுவாயில் இருப்பார். ஆனால் தந்தையோ மிக இளமையாக இருப்பார்.
இது ஏதோ விட்டலாச்சாரியா கதைபோல இருந்தாலும் இது நடப்பதற்க்கு அறிவியல் பூர்வமான சாத்தியக்கூறுகள் உள்ளன.
இது எப்படி சாத்தியம் என்று இந்த கானொளியில் விளக்கியுள்ளேன். நேரம் கிடைக்கையில் பார்த்து எளிதாக புரிகின்ற வகையில் இருக்கின்றதா என்று சொல்லுங்கள்.

Thursday, June 18, 2015

மனித மனது ஏன் இப்படி எதையாவது தேடி அலைந்து கொன்டே இருக்கின்றது?

தேடும் மனப்பாண்மையே மனிதனை குரங்குகூட்டத்தில் இருந்து பிரித்து இந்த முன்னேற்றத்துக்கு அழைத்து வந்திருக்கின்றது என்றால் மிகை இல்லை.

உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் எதையோ தேடி அலைந்து தன் இடத்தை பிடித்து ஆக்கிரமித்துக்கொன்டான்.

பூமியை முடித்துவிட்டு விண்ணுலகில் தேடலை ஆரம்பித்து போய்க்கொன்டு இருக்கின்றான்.

அதேபோல அனுவுக்குள் என்ன இருக்குன்னு உடைத்து உடைத்து பார்த்து எமாந்து கொன்டே இருக்கின்றான்.

மனிதனின் தேடும் ஆசைக்கு தீனிபோடும் வியாபாரத்தில் கூகிள் நிறுவனம் கோலோச்சி ஏகபோக ஆளுமை செய்வதில் வியப்பேதும் இல்லை.

எத்துனை விதமான தேடல்கள், கேள்விகள், ஆர்வங்கள், ஆராய்ச்சிகள். ஒருவரின் மனம் இப்படிப்பட்டதா என்று அவர் தேடும் தேடல்களின் மூலமே அறிந்து கொள்ளலாம்.

மனித மனம் தான் விசித்திரம் நிறைந்ததே, அது தேடும் தேடலும் விசித்திரமாகத்தானே இருக்கும்.

ஆமாம் அது காலத்தை கடந்து போய் தேடமுடியுமா என்று ஆர்வத்துடன் பார்க்கின்றது.

கடந்த காலத்துக்கு போக முடியுமா? எதிர்காலத்துக்கு உடனே போக முடியுமா? போய் திரும்ப புறப்பட்ட காலத்துக்கே வர முடியுமா?

காலப்பயனம் முடியுமா முடியாதா எனும் கேள்வியை விட ஏன் மனித மனது காலம் கடந்து போக ஆசைப்படுகின்றது எனும் கேள்வி என்னுள் பலமாக எழுகின்றது.

அதுகுறித்த கட்டுரைகள், கதைகள், மற்றும் திரைப்படங்கள் எந்த காலத்திலுமே மக்களால் அத்கம் விரும்பப்படுபவைகளாகவே இருக்கின்றன.

பள்ளிப்பருவத்தில் பார்த்த "Back To The Future" திரைப்படமானது 3 பாகங்களாக வந்து சக்கை போடு போட்டது.

இன்றைக்கும் காலப்பயணத்தைக் கருவாக கொன்ட திரைப்படங்கள் வருடத்துக்கு இரண்டு வந்துகொனேதான் இருக்கின்றன. மக்களும் சளைக்காமல் பார்த்துக்கொன்டேதான் இருக்கின்றனர். சாதாரனமாக இவ்வகை திரைப்படங்கள் சற்று குழப்பமாக புரிந்து கொள்ள சற்று கடினமாக இருக்கும்.

Terminator திரைப்படமானது எளிமையாக யாருமே புரிந்துகொள்ளும்படி இருந்தது.

தன்னை அழிக்கத்துடிக்கும் மனிதனை இல்லாமல் ஆக்குவத்ற்கு அவன் பிறப்பதற்கு முன்பே அவன் அம்மாவை கொலை செய்ய ஒரு எந்திர மனிதனை கடந்த காலத்துக்கு அனுப்புகிறது ஒரு கம்ப்யூட்டர்.
அந்த மனிதனோ தன்னை பெற்றவளை காப்பாற்ற இன்னொரு எந்திர மனிதனை அதே கடந்த காலத்துக்கு அனுப்புகின்றான்.

ஆர்னால்ட் ஸ்வார்செனகர் அருமையாக நடித்து மக்களின் உள்ளங்களை கொள்ளை கொன்டார்.

மீன்டும் வருகின்றார் தயாராக இருங்கள்.

ஜுலை 1 ம் தேதி உலகமெங்கும். Terminator Genisys.

காலப் பயனம் சாத்தியமா என்றால், சாத்தியமே என்று அறிவியல் சொல்லுவதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கின்றது.

இதுகுறித்த சிறு ஆவனப் படம் உருவாக்கிகொன்டு இருக்கின்றேன். ஓரிரு நாட்க்களில் வெளியிடுகின்றேன்.

Saturday, June 06, 2015

Enemy at the Gates.

உலகப்போரை பின்புலமாகக் கொன்ட திரைப்படங்கள் ஒவ்வொரு வருடங்களும் வந்துகொன்டுதான் இருக்கின்றன தயாரிப்புச்செலவு அதிகம் பிடிக்கும் இந்த மாதியான திரைப்படங்கள் எடுப்பதற்கு ஹாலிவுட் காரர்களுக்கு தயக்கமே இருப்பதில்லை, அவைகள் அரங்குகளில் சக்கைப்போடு போட்டுக்கொன்டுதான் இருக்கின்றன. இரண்டாம் உலகப்போரை பின் புலமாகக்கொன்டு நூற்றுக்கணக்கானத் திரைப்படங்கள் வந்துவிட்டன.
ஏன்?. மக்கள் போரை விரும்புகிறார்களா இல்லை நடந்துமுடிந்த போரைப்பறி அதிகம் தெரிந்துகொள்ள விரும்ப்புகின்றார்களா?
இது ஒரு உளவியல் உண்டு, போர் என்பதே அதிகார வெறிகொன்ட ஆதிக்கவாதிகளுக்கும் அடங்கிப் போக மறுக்கும் சுதந்திர விரும்பிகளுக்குமான ஆட்டமாகும் ஆமாம் போர்-ஆட்டம் ஆகும்.
வெற்றிபெற்றவன் தனது வலிமையை அனைவரும் அறிந்து கொள்ள ஆவனம் செய்கின்றான், அவனைச் சார்ந்தவர்கள் நாம் எப்படிப்பட்டவர்கள் என்று இறுமாந்து களிக்க கான விரும்புகின்றார்கள்.
தோற்றவனோ தவறே செய்யாத நாம் ஏபடியெல்லாம் அழிக்கப்பட்டோம் அதை மறக்கக்கூடாது அதைமீறி உற்சாகமாக வளரனும் என்று நினைவூட்ட அல்லது காயத்தைமறக்கக்கூடாது உக்கிரத்தை குறைக்காமல் இருந்து பழிவாங்கனும் என்று நாட்டாமை பொன்னம்பலம் தனக்குத்தானே சூடு போட்டுக்கொள்வது போல அதை ஆவனம் செய்கிறான். யூதர்களை இன அழிப்பு செய்த Holocaust பற்றி எத்தனை திரைப்படங்கள் வந்துவிட்டன.
நடுநிலை வாதிகளோ யார் பக்கம் நியாம் இருக்கு மற்றும் அதில் ஈடுபட்டவர்களின் மன நிலையை ஆரய்ந்து களிக்க விரும்புகின்றனர்.
திரைப்பட வியாபாரிகள் இதைப்பயன்ப்டுத்திக்கொள்கின்றனர். வெறும் போராட்டங்களைப்பற்றியே காட்டினால் தேறாது என்று அதனுடன் சினிமா மசாலாவையும் கலந்து கொடுத்தவன்னம் இருக்கின்றனர்.
பிரம்மான்டம்,, ஆரவாரம், பரபரப்பு மற்றும் சிலிர்ப்புகளை காதல், பாசம், தந்திரம் போன்றவறோடு கலந்து அற்புதமான திரைப்படம் தர போர்ப்பின்புலங்கள் தேவைப்பட்டுக்கொன்டே இருக்கின்றது.
Battle of Stalingrad 1942 ஆனது இரண்டாம் உலகப்போரில் மிக முக்கியமான் மற்றும் மிகப்பிரசித்தி பெற்ற நிகழ்வாகும்.
இரண்டாம் உலகப்போரில் ஜெர்மன் படைகள் முதலில் அடி வாங்கிய இடம் ரஷ்யாவின் ஸ்டாலின்-கிராடு ஆகும். ஸ்டாலின்கிராடு ஜெர்மனியர்களிடம் வீழ்ந்தால் ஒட்டுமொத்த ரஷ்யாவுமே காலி என்ற இக்கட்டான சூழ்நிலையில் ரஷ்யர்கள் உயிரைக்கொடுத்து போராடினார்கள் முடிவில் வெற்றியும் பெற்றார்கள். இந்தப்பின்புலத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் Enemy at the Gates.
இந்தத்திரைப்படம் 2001 ம் ஆண்டு 420 கோடி ரூபாய் செலவில் பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த Jean-Jacques Annaud என்பவரால் தயாரித்து இயக்கப்பட்டது ஆகும்..
உயிரைக்கொடுத்து போராடுபவர்களுக்கு ஒரு தன்நம்பிக்கை இருந்தால்தான் இலைக்கை நோக்கி முன்னெடுப்பர், அவர்களது நம்பிக்கைக்கு வலு சேர்க்கும் வகையிலான ஒரு வீரனின் பராக்கிரமச்செயல்கள் அவர்களை முன்னெடுக்கத் தூன்டும். அப்படிப்பட்ட ஒரு ரஷ்ய வீரனான வஸ்ஸிலி ஜய்ட்சேவ்(Vasily Zaytsev) பற்றியதுதான் இத்திரைப்படம் ஆகும்.
களாமாடாமல், தொலைவில் மறைத்திருந்து துப்பாக்கியால் எதிரிகளை தாக்கி களத்தில் முன்னேறும் வீரகளுக்கு பாதுகாப்பும் வழி ஏற்ப்படுத்திக் கொடுப்பதும் தான் sniper என்றழைக்கப்படும் வீரர்களின் வேலையாகும். அப்படிப்பட்ட ஒரு ரஷ்ய வீரனுக்கும் ஜெர்மன் ரானுவ-அதிகாரிக்குமான போட்டியே இப்படத்தின் கரு ஆகும்.
முக்கோனக் காதல், போர்முனைத் தாக்குதல்கள், இவைகளைஎல்லாம் விட இரண்டு sniper களுக்கு இடையேயான போட்டித்தாகுதல்கள், தந்திரமாக திட்டமிட்டு நகர்த்தல், போன்றவைகளோடு காரசாரமாக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு இருக்கின்றது. பார்த்திருக்காவிட்டால் கண்டிப்பாகப் பாருங்கள்.
ஆரம்பத்தில் ரஷ்ய வீரர்கள் வோல்கா நதியைக் கடக்கும்பொழுது ஜெர்மன் படைகள் தாக்கும் காட்சி உள்ளத்தை உறையவைக்கும் வகையில் இருக்கும்.

http://www.imdb.com/title/tt0215750/