Friday, September 11, 2015

#மகாகவி #பாரதியார்

இந்த மகா புருஷன் வாழ்ந்த காலத்தில் இவனை ஓட ஓட விரட்டி பட்டினி போட்டு, பரிகாசம் செததற்காக, இந்த சமுதாயம் என்றைக்காவது ஒருநாள் வருந்தித்தான் தீரவேன்டும். உலகம் முழுதும் திரன்டு நின்று இவன் பாடிய பாடல்களைப் பாடி அழுது நடைபெற வேன்டிய இந்த இறுதிச் சடங்கு இன்று வெறும் 14 பேர்களுக்கு மத்தியில் ஏதோ ஒரு அனாதைப் பிணத்துக்கு நடைபெறுவதைப் போல நடப்பதற்கு இந்த உலகம் என்றைக்காவது ஒருநாள் ரத்தக் கண்ணீர் வடித்துத்தான் தீரவேன்டும். ஏன் இவனுக்கு 14 பேர்தான் கிடைத்தார்கள். நம்து சமுதாயத்தில் மனிதர்கள் எங்கே தொலைந்து போனார்கள்? இத்ற்க்கெல்லம் என்ன காரனம்? இவனது அறிவா? அல்லது இவனிடத்தில் இருந்த நெருப்பா?

இது #பாரதி திரைப்படத்தில் அறிமுகக்காட்சியில் வரும் வசனம் ஆகும்.

சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;

என்று சொன்ன #மகாகவி #பாரதியார் இறந்து 94 வருடங்கள் உருன்டோடி விட்டன. 38 வயதில் கண்களில் கனவுகளுடன், எமாற்றத்துடன் இயற்க்கையோடு கலந்துவிட்ட நாள் இன்று.

இவரது பாட்டுக்களிள் அனைத்து அம்சங்களையும் (முக்கியமாக சமுதாயச் சிந்தனைகளை) சிலாகித்து பேசிக்கொன்டே இருக்கலாம். இவரது அனைத்து பாடல்களிலும் ஒரு தன்நம்பிக்கை தெறித்து விழுவதைப் பார்க்கலாம்.

"தேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கு இரையாகி மாயும சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ?!"

என்ற நம்பிக்கையில் வாழந்த முன்டாசுக் கவிப்பூ இளமையிலேயே உதிர்ந்தன் காரனம் துரதிர்ஷ்டமா? இல்லை சுயநலம் மிக்க இந்தச் சமுதாயமா?

அவர் கோபமாக கடவுளைப் பார்த்து கேட்ட கேள்வியெல்லாம் உன்மையில் இந்த தமிழ் சமுதாயத்தை நோக்கித்தான்.

 இயற்பியலின் தாய்வீடான ஐரோப்பாவில் குனாண்ட்டம் இயற்பியலின் நிலை குறித்து சன்டை நடைபெற்ற அந்தக் காலத்திலேயே உலகின் ஒரு மூலையில் யாரும் அறியாமல் இதுதான் இப்படித்தான் என்று "நிற்ப்பதுவே நடப்பதுவே பறப்பதுவே" பாடலின் மூலம் குவாண்ட்டம் இயற்ப்பியலை உணர்த்திய இவர் எந்தத் தர்க்கத்தின் மூலம் இதை உணர்ந்தார் என்று ஆச்சரிப்படுகின்றேன். அவரைப் பயன்படுத்திக்கொள்ளாமல் இந்த உலகமே அதிர்ஷ்டம் இழந்து போனது.

சமுதாயம் துக்கி எறிந்துவிடும் என்று தெரிந்துதான்

"நல்லதோர் வீனை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுன்டோ? சொல்லடி சிவசக்தி எனை சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்? " என்று கேட்டாரோ?

அவரது நினைவுநாளான இன்று எனது நெஞ்சார்ந்த அஞ்லிகளை சமர்ப்பிக்கின்றேன்.

No comments: