(இதைப்படித்து விட்டு இங்கு வரவும் (என்னைப்பற்றி)
நான் கணணியால் ஈர்க்கப்பட்ட கதை.
நான் மதுரை, நாகமலை புதுக்கோட்டை யில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் B.Com படித்துக்கொன்டிருந்தேன், படிப்பு என்றால் சராசரிப்படிப்புத்தான் சராசரி அரியர்களுடன் கல்லூரிப்படிப்பு முடிந்தது. தேறாத காரணத்தால் M.Com., படிக்க முடியவில்லை. தந்தை நடத்தி வந்த முகமைத்தொழிலில் ஐக்கியமாக மனம் இடம் கொடுக்க்வில்லை. மதுரையில் எனது கல்லூரி நன்பர்களுடன் சுற்றி கலக்கிய சந்தோஷமான தருனங்களை இழக்க விரும்பவில்லை என்ன செய்வது என்று யோசித்தேன்.
எனக்கு அறிவியல் எழுத்தாளர் திரு சுஜாதா அவர்களின் எழுத்துக்கள் நிரம்பப்பிடிக்கும் அவரது நாவல்கள் மற்றும் அறிவியல் கட்டுரைகளை விரும்பிப்படிப்பேன் அப்படித்தான் அவரது சிலுக்கான் சில்லுப்புரட்சி புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது. கணணிமேல் காதல் பிறந்த முதல் காரணம் இதுதான். அதே நேரத்தில் மதுரையில் உள்ள BDPS என்ற கணணி பயிற்சியகத்தின் விளம்பரமும் நாழிதழ்களின் பார்த்தேன்.
மதுரையின் சந்தோஷமான தருனங்களை தொடர அருமையான சந்தர்ப்பம் என்று என்னி மதுரையில் சக்தி சிவம் தியேட்டர் க்கு அருகில் உள்ள BDPS பயிலகத்தை பார்த்து வரச்சென்றேன். கணனி அதிகம் புழங்கியிராத அந்தக்காலத்தில் PDPS பயிலகத்தில் கணணிகளை பார்த்தவுடன் மெய்மறந்தேன்.
கண்ணாடி அறையில் வரிசையாக 4 கணனிகளை வைத்திருந்தனர். பச்சைப்பாஸ்பரஸ் திரைகளில் கன்னடித்துக்கொன்டிருந்த கர்ஸர் அதன் முன்னால் கீபோர்டுடன் விளையாடிக்கொன்டும் இருந்த மாணவ மாணவியர்கள், குளிரூட்டப்பட்ட அறையின் குளுமை, வாசனை, குளிர்சாதனத்தின் உர்ர்ர்ரென்ற உறுமல் மற்றும் நிசப்த்தின் இடையான கீபோர்டை தட்டும் சபத்தம் மட்டும். இவைகளை கன்டவுடன் எனது மனம் முடிவுசெய்துவிட்டது இதை படித்தே தீரவேன்டுமென்று. மூன்றுமாத பயிற்சிக்கட்டனம் 700 ரூபாய், என்ற முறையில் எனது COBOL வகுப்பு ஆரம்பமாகியது. மேடம் காவ்யா அவர்கள்தான் எங்கள் ஆசிரியை.
தினமும் இருமணி நேரம் பாடம் அப்புறம் ஒருமணி நேரம் செய்முறைவகுப்பு. அந்த ஒருமணிநேர செய்முறை வகுப்புக்காக நாள்முழுதும் ஏங்கி காத்துக்கிடப்பேன். COBOL நிரலாக்கத்தின் சூட்சுமங்கள் எனக்கு எளிதில் புரிந்தன. அப்பொழுதே BDPS பயிலகத்தில் முத்திரை பதிக்க துவங்கிவிட்டேன்.
பள்ளி மற்றும் கல்லூரிக்காலங்களில் கணிதம் தவிற மற்ற பாடங்களெல்லாம் என்க்கு வேப்பங்காய்தான். கணிதத்திலும் தேற்றங்கள் மற்றும் அல்ஜீப்ரா எனக்கு மிகவும் பிடித்தமானது ஆகும். தர்க்கரீதியிலான நோக்குடன் விடை கன்டுபிடிக்கும் வித்தைகள் கொன்ட மென்பொருள் நிலராக்கம் எனக்கு பிடித்துப்போனதில் வியப்பேதும் இல்லை.
BDPS பயிலகத்தில் வித்தியாசமான மற்றும் பெரிய அளவிளான கணணி நிரல்களை செய்து குறிப்பிடும்படியான பெயர் பெற்றேன்.
அதன்பிறகு அங்கேயே BASIC மற்றும் DBASE-II நிரலாக்கங்களை கற்றுத்தேர்ந்தேன்.
அப்பொழுதெல்லாம் கணணி பற்றிய புத்தகம் வாங்க காசு இருக்காது, ஆகவே மதுரையில் உள்ள சர்வோதய இலக்கிய பன்னை, மல்லிகை மற்றும் ஹிக்கின் பாதாம்ஸ் புத்தகக்கடைக்கு சென்று புத்தகம் பார்க்கும் சாக்கில் படித்து, முக்கியமானவைகளை பஸ் டிக்கெட்டில் பிட் எழுதி கொன்டு வருவேன்.
மதுரை சக்தி சிவம் தியேட்டருக்கருகில் உள்ள BDPS ணணி பயிலகத்தில் நான் படித்தபோடு அங்கு பணியாற்றியவர்கள்.
மேலாளர் மணி
உதவி மேலாளர் ரவி
ஆசிரியர்கள்
1). மேடம் காவ்யா (மதுரை காமராசர் பல்கலை கழகத்தின் நூலகத்தில் பணிச்ய்து வன்தார்)
2). பிரேம் சந்த் (மேடம் காவ்யாவுடன் காதல் திருமனம் செய்து, மதுரையில் கணணி விற்பனையகம் நடத்தி வந்தார்)
3). ரங்கராஜன் ( பிறகு மதுரையில் கணனி பயிலகம் நடத்திவந்தார்)
4). பிரதீப், நாகமலைப்புதுக்கோட்டை (PDPS இல் படித்து அங்கேயே பணியாற்றினார். மிக திறைமைசாலியான இவர் பிறகு நாகமலை புதுக்கோட்டையிலேயே கணணிப்பயிலகம் நடத்தி வந்தார் , நான் ஜப்பானுக்கு கிளம்பிய நேரத்தில் சென்னைக்கு நகர்ந்து வந்தார் அதன்பிறகு தொடர்பு இல்லை, (தொடர்பபு கொள்ள ஆவல்)
என்னுடன் PDPS பயிலகத்தில் படித்தவர்கள்
1)டி.டி என்றழைக்கப்படும் திருமலைச்சாமி, ஒட்டன்சத்திரம்
2). சர்புதீன் (சிங்கப்பூர் க்கு சென்றுவிட்டார் அவரது மாமா யானைக்கல்லில் பழ ஏஜன்ட்)
3). சோமு என்றழைக்கப்படும் சோமசுந்தரம்
4). வில்லியம்ஸ், தின்டுக்கல் (இவருடன் நிறைய தின்டுக்கல் மாணவர்கள் படித்தனர், தினமும் ரயில் மூலம் மதுரைக்கு குழாமாக
வந்துபோவர், இவர்தான் அந்த குழுவுக்கு தலைவர், பிறகு தின்டுக்கல் PDPS பபயிலகத்தின் மேலாளராக இருந்தார்)
5). மோகன் (மதுரை ரயில்வே காலனியிலிருந்து வந்தார் பிறகு மதுரை ரயில் நிலைய கணணி அலுவலகத்திலேயே பணி செய்தார்).
(பிரேம், வாசு மற்றும் லட்சுமனன் இவர்களும் ரயில்வே காலணியை சேர்ந்தவர்கள்)
இன்னும் நிறையபேர் படித்தனர் பெயர் ஞாபகம் இல்லை
தொடர்ச்சி இங்கே ( எனது முதல் கணணிப்பணி )
நான் கணணியால் ஈர்க்கப்பட்ட கதை.
நான் மதுரை, நாகமலை புதுக்கோட்டை யில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் B.Com படித்துக்கொன்டிருந்தேன், படிப்பு என்றால் சராசரிப்படிப்புத்தான் சராசரி அரியர்களுடன் கல்லூரிப்படிப்பு முடிந்தது. தேறாத காரணத்தால் M.Com., படிக்க முடியவில்லை. தந்தை நடத்தி வந்த முகமைத்தொழிலில் ஐக்கியமாக மனம் இடம் கொடுக்க்வில்லை. மதுரையில் எனது கல்லூரி நன்பர்களுடன் சுற்றி கலக்கிய சந்தோஷமான தருனங்களை இழக்க விரும்பவில்லை என்ன செய்வது என்று யோசித்தேன்.
எனக்கு அறிவியல் எழுத்தாளர் திரு சுஜாதா அவர்களின் எழுத்துக்கள் நிரம்பப்பிடிக்கும் அவரது நாவல்கள் மற்றும் அறிவியல் கட்டுரைகளை விரும்பிப்படிப்பேன் அப்படித்தான் அவரது சிலுக்கான் சில்லுப்புரட்சி புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது. கணணிமேல் காதல் பிறந்த முதல் காரணம் இதுதான். அதே நேரத்தில் மதுரையில் உள்ள BDPS என்ற கணணி பயிற்சியகத்தின் விளம்பரமும் நாழிதழ்களின் பார்த்தேன்.
மதுரையின் சந்தோஷமான தருனங்களை தொடர அருமையான சந்தர்ப்பம் என்று என்னி மதுரையில் சக்தி சிவம் தியேட்டர் க்கு அருகில் உள்ள BDPS பயிலகத்தை பார்த்து வரச்சென்றேன். கணனி அதிகம் புழங்கியிராத அந்தக்காலத்தில் PDPS பயிலகத்தில் கணணிகளை பார்த்தவுடன் மெய்மறந்தேன்.
கண்ணாடி அறையில் வரிசையாக 4 கணனிகளை வைத்திருந்தனர். பச்சைப்பாஸ்பரஸ் திரைகளில் கன்னடித்துக்கொன்டிருந்த கர்ஸர் அதன் முன்னால் கீபோர்டுடன் விளையாடிக்கொன்டும் இருந்த மாணவ மாணவியர்கள், குளிரூட்டப்பட்ட அறையின் குளுமை, வாசனை, குளிர்சாதனத்தின் உர்ர்ர்ரென்ற உறுமல் மற்றும் நிசப்த்தின் இடையான கீபோர்டை தட்டும் சபத்தம் மட்டும். இவைகளை கன்டவுடன் எனது மனம் முடிவுசெய்துவிட்டது இதை படித்தே தீரவேன்டுமென்று. மூன்றுமாத பயிற்சிக்கட்டனம் 700 ரூபாய், என்ற முறையில் எனது COBOL வகுப்பு ஆரம்பமாகியது. மேடம் காவ்யா அவர்கள்தான் எங்கள் ஆசிரியை.
தினமும் இருமணி நேரம் பாடம் அப்புறம் ஒருமணி நேரம் செய்முறைவகுப்பு. அந்த ஒருமணிநேர செய்முறை வகுப்புக்காக நாள்முழுதும் ஏங்கி காத்துக்கிடப்பேன். COBOL நிரலாக்கத்தின் சூட்சுமங்கள் எனக்கு எளிதில் புரிந்தன. அப்பொழுதே BDPS பயிலகத்தில் முத்திரை பதிக்க துவங்கிவிட்டேன்.
பள்ளி மற்றும் கல்லூரிக்காலங்களில் கணிதம் தவிற மற்ற பாடங்களெல்லாம் என்க்கு வேப்பங்காய்தான். கணிதத்திலும் தேற்றங்கள் மற்றும் அல்ஜீப்ரா எனக்கு மிகவும் பிடித்தமானது ஆகும். தர்க்கரீதியிலான நோக்குடன் விடை கன்டுபிடிக்கும் வித்தைகள் கொன்ட மென்பொருள் நிலராக்கம் எனக்கு பிடித்துப்போனதில் வியப்பேதும் இல்லை.
BDPS பயிலகத்தில் வித்தியாசமான மற்றும் பெரிய அளவிளான கணணி நிரல்களை செய்து குறிப்பிடும்படியான பெயர் பெற்றேன்.
அதன்பிறகு அங்கேயே BASIC மற்றும் DBASE-II நிரலாக்கங்களை கற்றுத்தேர்ந்தேன்.
அப்பொழுதெல்லாம் கணணி பற்றிய புத்தகம் வாங்க காசு இருக்காது, ஆகவே மதுரையில் உள்ள சர்வோதய இலக்கிய பன்னை, மல்லிகை மற்றும் ஹிக்கின் பாதாம்ஸ் புத்தகக்கடைக்கு சென்று புத்தகம் பார்க்கும் சாக்கில் படித்து, முக்கியமானவைகளை பஸ் டிக்கெட்டில் பிட் எழுதி கொன்டு வருவேன்.
மதுரை சக்தி சிவம் தியேட்டருக்கருகில் உள்ள BDPS ணணி பயிலகத்தில் நான் படித்தபோடு அங்கு பணியாற்றியவர்கள்.
மேலாளர் மணி
உதவி மேலாளர் ரவி
ஆசிரியர்கள்
1). மேடம் காவ்யா (மதுரை காமராசர் பல்கலை கழகத்தின் நூலகத்தில் பணிச்ய்து வன்தார்)
2). பிரேம் சந்த் (மேடம் காவ்யாவுடன் காதல் திருமனம் செய்து, மதுரையில் கணணி விற்பனையகம் நடத்தி வந்தார்)
3). ரங்கராஜன் ( பிறகு மதுரையில் கணனி பயிலகம் நடத்திவந்தார்)
4). பிரதீப், நாகமலைப்புதுக்கோட்டை (PDPS இல் படித்து அங்கேயே பணியாற்றினார். மிக திறைமைசாலியான இவர் பிறகு நாகமலை புதுக்கோட்டையிலேயே கணணிப்பயிலகம் நடத்தி வந்தார் , நான் ஜப்பானுக்கு கிளம்பிய நேரத்தில் சென்னைக்கு நகர்ந்து வந்தார் அதன்பிறகு தொடர்பு இல்லை, (தொடர்பபு கொள்ள ஆவல்)
என்னுடன் PDPS பயிலகத்தில் படித்தவர்கள்
1)டி.டி என்றழைக்கப்படும் திருமலைச்சாமி, ஒட்டன்சத்திரம்
2). சர்புதீன் (சிங்கப்பூர் க்கு சென்றுவிட்டார் அவரது மாமா யானைக்கல்லில் பழ ஏஜன்ட்)
3). சோமு என்றழைக்கப்படும் சோமசுந்தரம்
4). வில்லியம்ஸ், தின்டுக்கல் (இவருடன் நிறைய தின்டுக்கல் மாணவர்கள் படித்தனர், தினமும் ரயில் மூலம் மதுரைக்கு குழாமாக
வந்துபோவர், இவர்தான் அந்த குழுவுக்கு தலைவர், பிறகு தின்டுக்கல் PDPS பபயிலகத்தின் மேலாளராக இருந்தார்)
5). மோகன் (மதுரை ரயில்வே காலனியிலிருந்து வந்தார் பிறகு மதுரை ரயில் நிலைய கணணி அலுவலகத்திலேயே பணி செய்தார்).
(பிரேம், வாசு மற்றும் லட்சுமனன் இவர்களும் ரயில்வே காலணியை சேர்ந்தவர்கள்)
இன்னும் நிறையபேர் படித்தனர் பெயர் ஞாபகம் இல்லை
தொடர்ச்சி இங்கே ( எனது முதல் கணணிப்பணி )
1 comment:
சோகமான செய்திகள்.
நாகமலை புதுக்கோட்டை பிரதீப் மற்றும் பிரேம் சந்த் இருவரும் இறந்துவிட்டனர் என்ற துக்கமான செய்தியினை பகிர்ந்து கொள்ளுகிறேன். அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேன்டுகிறேன்.
விஜயன்
Post a Comment